Friday, September 24, 2010

தமிழகம் நிகழ்வுகள் - 2009

ஜன. 12
திருமங்கலம் இடைத்தேர்தல். இதில், தி.மு.க. வேட்பாலர் லதா அதியமான் 39 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 
ஜன. 18
இல‌ங்கை‌யி‌ல் போரை ‌நிறு‌த்‌த ம‌த்‌திய அரசு உடனடியாக நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று வ‌லியுறு‌த்‌தி, உண்ணாவிரதம் மேற்கொண்டார், ‌விடுதலை‌ச் ‌சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் ‌திருமாவளவ‌ன்.
ஜன. 23
இலங்கையில் போர் நிறுத்தம் அறிவித்து, தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காணும் வகையில் பேச்சுவார்த்தையைத் துவக்க  வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜன. 29 
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதையும், போரை முடிவுக்கு கொண்டுவரவும் வலியுறுத்தி, முத்துக்குமார் என்ற இளைஞர் தீக்குளித்து மரணமடைந்தார்.
பிப். 4
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து, இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கம் அழைப்பு விடுத்திருந்த மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. 
பிப். 19 
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி உள்பட பலரும் காயமடைந்தனர்.
மார்ச் 9 
இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி, சென்னையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டார்.
ஏப். 23
இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி, தி.மு.க அழைப்பு விடுத்திருந்த பொது வேலைநிறுத்தம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெகுவாக ஆதரவைப் பெற்றது. 
ஏப். 27 
இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வலியுறுத்தி, தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி சென்னையில் திடீரென காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.
மே 13 
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி 28 இடங்களில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. அணி 12 தொகுதிகளை கைப்பற்றியது. 
மே 28 
மத்திய அமைச்சர்களாக தி.மு.க.வின் மு.க.அழகிரி, தயாநிதி மாறன், ஆ.ராசா, காங்கிரஸ் கட்சியின் ஜி.கே.வாசன்  உள்ளிட்டோர் பதவியேற்றுக் கொண்டனர்.
மே 29
தமிழகத்தின் துணை முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டார்.
ஜூன் 25 
இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு, வெளிநாட்டு தமிழர்கள் உணவு, மருந்து உள்ளிட்ட நிவாரண  பொருட்களுடன் 'வணங்காமண்' என்ற கப்பலை அனுப்பினர். ஆனால், அந்த கப்பலுக்கு இலங்கை அரசு அனுமதி மறுத்ததால், அந்த கப்பல் சென்னை அருகே நிறுத்தப்பட்டது.
ஜூலை 23
இந்தியாவில் முதல் முறையாக தமிழ் நாட்டில்  ஒரு கோடி பேருக்கு இலவச மருத்துவ காப்பீடு வழங்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தியது. இந்த திட்டத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
ஆக. 22 
தமிழகத்தில் இளையான்குடி, தொண்டாமுத்தூர், கம்பம், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு  நடந்த இடைத்தேர்தலில் ‌தி.மு.க. கூ‌ட்ட‌ணி வே‌ட்பாள‌ர்க‌ள் வெ‌ற்‌றி பெ‌‌ற்றனர். 
ஆக. 26
தமிழகத்தில் அடுத்த கல்வி ஆண்டு முதல் சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்படுகிறது என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.
செப். 16 
தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர்களும், எம்.பி.,க்களும் தங்களுக்கு தமிழில் கேள்வி எழுப்பவும், பதில் தரவும் அனுமதி  தரவேண்டும் என்று நாடாளுமன்ற அதிகாரியிடம் கோரிக்கை மனு கொடுத்திருந்தனர். ஆனால், நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் தமிழில் பதில் அளிக்க முடியாது என்று மக்களவையின் தலைமைச் செயலர் பி.டி.டி. ஆச்சாரி தெரிவித்தார்.
செப். 23
முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக, புதிய அணை குறித்து ஆய்வு செய்வதற்கு கேரள அரசுக்கு மத்திய அரசு அனுமதி  வழங்கியது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
அக். 3
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில், தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு  நிரந்தர குடியுரிமை வழங்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  
  அக். 7
முல்லை பெரியாறில் கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கு மத்திய அரசு அளித்துள்ள அனுமதி ஆணைக்கு தடை கோரி,  உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
அக். 9
அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் மாநாடு சென்னையில் நடந்தது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் கருணாநிதிக்கு 'உலக கலை படைப்பாளி' விருது வழங்கப்பட்டது.
அக். 10
தமிழக தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் 10 பேர் கொண்ட குழு டி.ஆர்.பாலு தலைமையில் இலங்கை புறப்பட்டு சென்றது. அங்கு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலைபற்றி அறிய இந்தக்குழு சென்றது.
அக். 29
சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த வழக்கறிஞர்கள் - காவல்துறையினர் மோதல் தொடர்பான வழக்கில், சென்னையின் அப்போதைய போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன், கூடுதல் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உள்பட  4 போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நவ. 8
நீலகிரியில் அதிகபட்சமாக 32 சென்டி மீட்டர் அளவில் பலத்த மழை பெய்தது.
டிச. 7 
தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்காக இலங்கையுடன் புதிய ஒப்பந்தம் போடப்படும் என்றும், கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து  செய்ய மாட்டோம் என்றும் மாநிலங்களவையில் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.

டிச. 10 
கடலில் மீனவர்கள் மீன் பிடிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய பல்வேறு நிபந்தனைகளுடன் கூடிய கடல் மீன்பிடி தொழில்  சட்ட மசோதாவை, மத்திய அரசு நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்ய இருந்தது.
இந்த மசோதாவுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மீனவர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவியது. இதையடுத்து, இந்த மசோதாவை நடப்பு  கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட மாட்டாது. விரிவான ஆலோசனைக்குப் பிறகு முடிவு எடுக்கப்படும் என்று மத்திய வேளாண் அமைச்சர் சரத்பவார் அறிவித்தார்.
டிச. 23
திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. 

சர்வதேச நிகழ்வுகள் - 2009

ஜனவரி 
ஜன.2:​ விடு​த​லைப் புலி​க​ளின் அர​சி​யல் தலை​ந​க​ரான கிளி​நொச்​சியை இலங்கை ராணு​வம் கைப்​பற்​றி​யது.​ 
ஜன.6:​ வங்​க​தேச பிர​த​ம​ராக ஷேக் ஹசீனா பத​வி​யேற்பு.​
ஜன.9:​ ஏடன் வளை​கு​டா​வில் சோமா​லிய கடல் கொள்​ளை​யர்​கள் பிடித்து வைத்​தி​ருந்த ஈரான் கப்​பல் மற்​றும் அதில் இருந்த 7 இந்​திய பணி​யா​ளர்​கள் உள்​பட 25 பேர் விடு​விப்பு.​ 
ஜன.20:​ அமெ​ரிக்க அதி​ப​ராக பராக் ஒபாமா பத​வி​யேற்பு.​                                          பிப்ரவரி                                                                                                                                       பிப்.3:​ உள்​நாட்​டில் தயா​ரிக்​கப்​பட்ட முதல் செயற்​கைக்​கோளை வெற்​றி​க​ர​மாக விண்​ணில் நிலை நிறுத்​தி​யது ஈரான்.​                                                                                    பிப்.5: அட்​லாண்​டிக் பெருங்​க​டலை நீந்​திக் கடந்த முதல் பெண் என்ற                       சாத​னையைப் புரிந்​தார் ஜெனி​ஃ​பர் ஃபிஜ்ஜி ​(56).​                                  பிப்.11:​ ஜிம்​பாப்வே பிர​த​ம​ராக மோர்​கன் சுவாங்​கி​ராய் பத​வி​யேற்பு.​                                                                                                                                                               மார்ச்                                                                                                                                                     மார்ச்  4: போர் குற்​றம்,​​ மனித உரிமை மீற​லுக்​காக சூடான் அதி​பர் உமர் அல் பசீருக்கு கைது வாரண்ட் பிறப்​பித்​தது சர்​வ​தேச நீதி​மன்​றம்.​                                              ​ மே                                                                                                                                                           மே 13:​ நேபா​ளத்​தில் பிரா​ம​ணர் அல்​லா​த​வர்​க​ளும் கோயி​லில் பூஜை                   நடத்​தலாம்என்றுஅந்​நாட்டுஅரசுஅறி​வித்​தது.​                                                                      மே 18:​ விடுத​லைப் புலி​கள் இயக்​கத் தலை​வர் வேலுப்​பிள்ளை பிர​பா​க​ரன் கொல்​லப்​பட்​ட​தாக இலங்கை அரசு அறி​விப்பு;​ விடு​த​லைப் புலி​க​ளுக்கு                 எதி​ரான போர் முடி​வுக்கு வந்து விட்​ட​தாக ராஜ​பட்சதக​வல்.​​                                         மே 23:​ நேபாள பிர​த​ம​ராக நேபாள கம்​யூ​னிஸ்ட் கட்​சித் தலை​வர் மாதவ் குமார் நேபாள் போட்​டி​யின்​றித் தேர்வு.​                                                                                                ​மே 25:​ நேபாள பிர​த​ம​ராக மாதவ் குமார் நேபாள் பத​வி​யேற்பு.​                                            ஜூன்                                                                                                                                             ஜூன் 26:​ பாப் இசை மன்​னன் மைக்​கேல் ஜாக்​சன் மறைவு.​                                    ஜூலை                                                                                                                                       ஜூலை 20:​ மியான்​மர் தலை​வர் ஆங் சான் சூகி​யிக்கு மகாத்மா காந்தி அமைதி விருதுஅறி​விக்​கப்​பட்​டது.​                                                                                              ஜூலை 29:​ கம்ப்​யூட்​டர் தேடு​தல் பொறி​யில் முன்​ன​ணி​யில் உள்ள கூகுள் நிறு​வ​னத்​துக்கு போட்​டியை ஏற்​ப​டுத்​தும் வகை​யில் யாகூ-​ மைக்​ரோ​சா​ஃப்ட்        ஒப்​பந்​தம்.​                                                                                                                                                   ஆகஸ்ட்                                                                                                                                          ஆக.​ 5:​ ஈரான் அதி​ப​ராக மஹ்​மூத் அக​ம​து​நி​ஜாத் பத​வி​யேற்பு.​                                    அக்.​6: அமெரிக்​கா​வைச் சேர்ந்த சார்​லஸ் கே.​ காவோ,​​ வில்​லார்ட் எ.​ பாயல்,​​ ஜார்ஜ் இ.​ ஸ்மித் ஆகி​யோ​ருக்கு இயற்​பி​ய​லுக்​கான நோபல் பரிசு அறி​விப்பு.​அக்.​ 7:​ தமி​ழ​கத்​தைச் சேர்ந்த வெங்​கட்​ரா​மன் ராம​கி​ருஷ்​ணன்,​​ அமெ​ரிக்​க​ரான தாமஸ் ஸ்டீட்ஸ்,​​ இஸ்​ரே​லின் அடா யோனத் ஆகி​யோ​ருக்கு வேதி​ய​லுக்​கான நோபல்பரிசுஅறி​விப்பு.​​                                                                                                      அக்.8: ​ ​ ​ ​1) ஜெர்​ம​னி​யைச் சேர்ந்த ஹெர்தா முல்​ல​ருக்கு இலக்​கி​யத்​துக்​கான நோபல் பரிசு அறி​விப்பு.​​                                                                                                            2)ஆப்​கா​னிஸ்​தா​னில் இந்​திய தூத​ர​கம் மீது தலி​பான் பயங்​க​ர​வா​தி​கள் இரண்​டா​வது முறை​யாக நடத்​திய வெடி​குண்​டுத் தாக்​குத​லில் 17 பேர் சாவு.​                      அக்.9:​ அ மெ​ரிக்க அதி​பர் பராக் ஒபா​மா​வுக்கு அமை​திக்​கான நோபல் பரிசு           அறி​விப்பு.​​                                                                                                                                               டிசம்பர்                                                                                                                                             டிச.7:​ இந் ​தியா-​ ரஷியா இடையே பாது​காப்பு ஒத்​து​ழைப்பு,​​ யுரே​னி​யம் வழங்​கு​வது மற்​றும் தொழில்​நுட்​பம் தொடர்​பான ஒப்​பந்​தம் கையெ​ழுத்து.​                டிச.12:​ விடு​த​லைப்பு​லி​கள் தலை​வர் பிர​பா​க​ரன் இறந்​தது தொடர்​பான ஆதா​ரம் மற்​றும் விவ​ரங்​களை இந்​தி​யா​வி​டம் அளித்​தது இலங்கை.​

Wednesday, September 15, 2010

சங்க கால நூல்கள்

அகநானூறு : 
அகத்திணைக்குரிய கருப்பொருள்களாக தெய்வம், உயர்ந்தோர், தாழ்ந்தோர், புள்,விலங்கு, ஊர், நீர், பூ, மரம், உணவு, பறை, யாழ், பண், தொழில் முதலிய பதினான்கும் உயர்திணைக்குரியதாக வைத்து இயற்றப்பட்டதே அகநானூறு. சங்க இலக்கியம் எட்டுத் தொகைகளில் ஏழாவதாக வைத்துப் போற்றப்படுவது அகநானூறு. இதில் உள்ள செய்யுள்கள் அகப்பொருட்களை அடிப்படையாய் வைத்து பெருந்தேவனார் முதலிய பெரும் புலவோர் குழுமம் இதனை படைத்தது.
அகநானூறு நிரை, மணி, கோவை என மூன்று பகுதியாகத் தொகுக்கப்பட்டது. நிரையை விளக்க இதன் அகப்பொருள் வலிமை வாய்ந்த ஒரு யானைக்கு நிகராம். மணி மதிப்பில் அளவிட பவளம் எனவும் முத்துக்களால் கோர்க்கப்பட்ட மாலையை ஒத்த நித்திலக் கோவை எனவும் வழங்கப்படும். இவ்வாறு இதனைத் தொகுத்தவர் உருத்திரசன்மன், இவர் தொகுக்க உதவிய அரசன் உக்கிரப் பெருவழுதி அகநானூற்றிக்கு நெடுந்தொகை என்ற ஒரு சிறப்பு பெயரும் உண்டு.
புறநானூறு
புறத்திணையான அரசனின் போர்க்குணம், வெற்றி, படை, நாடு, எல்லை, வீரம், பொருள் உதவி, செல்வச் செழிப்பு, எதிரிகள், எதிரியின் திறன் முதலியவற்றைப் பற்றி பாடப்பட்டவை. நானூறு பாடல்களைக் கொண்ட இதனை அகநானூறு தலைமை ஏற்றுப்பாடிய பாரதம் பாடிய பெருந்தேவனாரே இதனையும் தலைமை ஏற்றுள்ளார். இறை வாழ்த்தைத் தொடங்கி வைத்த பெருந்தேவனாரைத் தொடர்ந்து புலவர் பெருமக்களின் குழுவினர் பாடிய செய்யுள் தொகுப்பே புறநானூறு.
பாடிய புலவர் பெருமக்கள் :
அரிசில் கிழார்
ஆலத்தூர் கிழார்
ஆவூர் மூலங்கிழார்
இடைக்காடனார்
இரும்பிடர்த்தலையார்
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
உறையூர் மருத்துவன் தாமோதரனார்
உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
ஊன்பொதி பசுங்குடையார்
ஐயூர் முடவனார்
ஐயூர் மூலங்கிழார்
ஒருசிறைப் பெரியனார்
ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன்
ஒரேருழவர்
ஒளவையார்
கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
கணியன் பூங்குன்றன்
கபிலர்
கருங்குழலாதனார்
கருவூர்க் கதப்பிள்ளை சாத்தனார்
கல்லாடனார்
கழாத்தலையார்
கள்ளில் ஆத்திரையனார்
காரி கிழார்
காவற்பெண்டு
காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
குடபுலவியனார்
குறமகள் இளவெயினியார்
குறுங்கோழியூர் கிழார்
கோவூர் கிழார்
கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார்
சாத்தந்தையார்
சேரமான் கணைக்காலிரும்பொறை
சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந் தும்பியார்
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
சோழன் நல்லுருத்திரன்
சோழன் நலங்கிள்ளி
தாமற் பல்கண்ணனார்
துறையூர் ஓடைகிழார்
தொண்டைமான் இளந்திரையன்
நரிவெரூஉத்தலையார்
நெட்டிமையார்
நெடும்பல்லியத்தனார்
பக்குடுக்கை நன்கணியார்
பரணர்
பாண்டரங்கண்ணனார்
பாண்டியன் அறிவுடை நம்பி
பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
பாரதம் பாடிய பெருந்தேவனார்
பாரி மகளிர்
பிசிராந்தையார்
புறத்திணை நன்னாகனார்
பெருங்குன்றூர் கிழார்
பெருங்கோழி நாய்கன் மகள்நக்கண்ணையார்
பெருஞ்சித்திரனார்
பெருந்தலைச் சாத்தனார்
பெரும்பதுமனார்
பேய்மகள் இளவெயினியார்
பொய்கையார்
பொருந்திலிளங்கீரனார்
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்
மதுரை மருதன் இளநாகனார்
மாங்குடி கிழார்
மாறோக்கத்து நப்பசலையார்
முரஞ்சியூர் முடிநாகனார்
மோசிகீரனார்
வடநெடுந்தத்தனார்
வடமவண்ணக்கன் தாமோகதரனார்
வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தனார்
வடமவண்ணக்கன் பேரி சாத்தனார்
வன்பரணர்
வெண்ணிக் குயத்தியர்
வெள்ளைக்குடி நாகனார்
பரிபாடல்:
சங்கப் புலவர்களால் ஆக்கப்பட்டது. எட்டுத்தொகை வரிசையில் ஐந்தாம் நூலாக இதனைக் கூறுவர். திருமால், குமரன், கடல், வைகை, மதுரை முதலியவற்றை முன்னிலைப்படுத்தி பாடப்பட்ட எழுபது பாடல்களின் தொகுப்பாகும்.
எட்டுத்தொகை நூல்கள்:

1. நற்றிணை
2. குறுந்தொகை
3. ஐங்குறுநூறு
4. பதிற்றுப்பத்து
5. பரிபாடல்
6. கலித்தொகை
7. அகநானூறு
8. புறநானூறு

எட்டுத்தொகை நூல்களை எளிமையாக நினைவில் வைத்துக்கொள்ள தனிப்பாடல்:


"நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத்தொகை."


பத்துப்பாட்டு நூல்கள்:

1. திருமுருகாற்றுப்படை
2. பொருநராற்றுப்படை
3. சிறுபாணாற்றுப்படை
4. பெரும்பாணற்றுப்படை
5. கூத்தாராற்றுப்படை (மலைபடுகடாம்)
6. மதுரைக் காஞ்சி
7. முல்லைப்பாட்டு
8. குறிஞ்சிப் பாட்டு
9. நெடுநல்வாடை
10. பட்டினப்பாலை

பத்துப்பாட்டு நூல்களை எளிமையாக நினைவில் வைத்துக்கொள்ள தனிப்பாடல்:

"முருகு பொருநாறு பாண் இரண்டு முல்லை
பெருகு வள மதுரைக் காஞ்சி-மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து."
 
பதிற்றுப் பத்து :
எட்டுத்தொகை நூலில் நான்காவதாக எண்ணத்தக்கது. பத்து பேரடங்கிய சங்கப் புலவர்களால் இது இயற்றப்பட்டது. பத்து புலவோரும் பத்து, பத்து, பாக்களை இதில் இயற்றியுள்ளனர். இதில் முதலாம் பாடலும் பத்தாம் பாடலும் கிடைக்கவில்லை. இரண்டு முதல் ஒன்பது வரையே கிடைக்கப் பெற்றது. சேர அரசர்களின் வாழ்வையும், வளத்தையும் கூறும் நூல் இது.
ஐங்குறுநூறு :
அகத்திணைப் பொருளை அடிப்படையாகக் கொண்டுள்ள நூல். ஐந்து பகுதிகளான இந்நூலை ஓரம் போகியார், அம்மூவனார், கபிலர், ஒதலாந்தையார், பேயனார் முதலான புலவர்கள் ஒவ்வொருவரும் நூறு, நூறு அகவல்களாகப் பாடியுள்ளனர். இதன் தொடக்கமான இறை வாழ்த்துப் பாடலை பெருந்தேவனார் படைத்துள்ளார். இப்பாடல் திரட்டை புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் தொகுத்தார்.
கலித்தொகை :
எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவதாகக் கூறப்படுவது. கலித்தொகை நூற்றைம்பது பாக்களைக் கொண்ட இதில் புலவர் குழுவே பாடியுள்ளது. கலித்தொகைக்கு நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார்.
குறுந்தொகை :
எட்டுத்தொகை வரிசையில் இரண்டாம் நூலிது. சங்கப் புலவர்கள் மூவர் இதனைப் படைத்துள்ளனர். இந் நூலுக்கு பேராசிரியரும், நச்சினார்க்கினியனாரும் உரை எழுதியுள்ளனர்.
நற்றிணை :
ஐந்து திணைகளிலும் நானூறு பாடல்களைக் கொண்ட நூல். பெருந் தேவனார் தொடங்கி ஆலங்குடிவங்கனார் இறுதியாகக் கொண்டு புலவோர் குழுவால் பாடப்பட்ட நூல் இதை பன்னாடு தந்த பாண்டியன் பெருவழுதி தொகுத்தார்                                                                                              

பாண்டியர்கள்

குமரி கண்டத்தில் தோன்றிய ஆதி மனித சந்ததியினரே பாண்டியராக உருப்பெற்றிருக்கலாம் என்பது பொதுவாக நிலவும் கருத்து.தொல்காப்பியம் பாண்டிய மன்னர்களால் முதல் சங்கத்தில்  அரங்கேற்றப்பட்டது எனவும் கடை சங்கத்தில் அரங்கேற்றப்பட்டது எனவும் பொதுவான கருத்து நிலவுகின்றது. பாண்டியர்கள் மீன் கொடியினைகொண்டு ஆண்டதால் மீனவர் என்றும்,பின்னாளில் பரத கண்டம் என்று அழைக்கப்பட்டதாலும்,பாண்டியர் கடல் சார்ந்த ஆளுகை கொண்டிருந்ததாலும் பரதவர் எனும் இனத்தவராக இருக்கக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.அசோகரின் கல்வெட்டுக்களில் பாண்டிய நாடு பாண்டியர் பற்றிய செய்திகள் உள்ளன. பாண்டியர்கள் வேப்பம்பூ  மாலை அணிவர்இவர்களது கொடி மீன் கொடி  தென்னவன்,மீனவன்,மாறன்,கடலன் வழுதி,பரதவன் மற்றும் முத்தரையன் போன்ற பல பெயர்களால் அழைக்கப்பட்ட னர்  
பாண்டியரின் ஆட்சிக்கு உற்ற துணையாக இருந்தவர்கள் அமைச்சர்  அடுத்த நிலையில்அரசியல்அதிகாரிகள்,படைத்தலைவர்கள்இருந்தனர்.அரையர்,நாடுவகை செய்வோர்.வரியிலார்,புரவுவரித் திணைக்களத்தார்,திருமுகம் எழுதுவோர் ஆகியவர்களும் அரசனுக்கு ஆட்சியில் துணை செய்தவர்கள் ஆவார்கள்.
அரையர் உள்நாட்டுப் பணி புரியும் நாட்டதிகாரிகள் ஆவார்கள்.இவர்கள்,நாட்டைச் சிற்றி வந்து,குடிமக்கள் குறை கேட்டு நீதி வழங்குவர்.
நாடுவகை செய்வோர் ஊரில் உள்ள நிலங்களில் அளந்து பணி செய்வர்.
வரியிலார் அனைத்து வகையிலும் ஊர் மக்கள் அரசுக்கு வரி செலுத்துவதை கணக்கு வைப்பார்கள்.
புரவு வரித்திணைக் களத்தார் வட்டாட்சியர்போல் செயல்படுபவர்கள்.

பாண்டியர்காலத்தில்வரியைஇறைஎன்றழைத்தனர்.தளியிறை,செக்கிறை,தட்டார்ப் பட்டம்,இடைவரி சான்று வரி,பாடிகாவல்,மனையிறை,உல்கு முதலான வரி முறைகள் இருந்தன.இறை,பாட்டம் என்பன வரியினை உணர்த்தும் சொற்களாகத் திகழ்ந்தன.தட்டார்ப் பாட்டம் கம்மாளரின் வரியாகும்.வீட்டு வரியினை மனை இறை என்றழைத்தனர்.
ஊர்தோறும் உள்ள நிலங்களை அளந்து வரி விதிக்கப்பட்டது.பாண்டிய நாடு முழுவதும் அளக்கப்பட்டது. நிலத்தினை அளக்கும் கோல் 'சுந்தர பாண்டியன் கோல்' என்ற பெயரைக் கொண்டிருந்தது. குடிதாங்கிக் கோலும் அளவு கோலாக புழக்கத்தில் இருந்தது.நிலங்களை குழி,மா,வேலி என்று பெயரிட்டு அளந்தனர்.அளந்த நிலத்திற்கு எல்லை கல் நட்டனர்.இக்கற்களே புள்ளடிக் கற்களாகும்.சிவன் கோயில்களிற்கு இடப்பட்ட நிலத்திற்கு திரிசூலக்கல் நடப்பட்டது.திருமால் கோயிலுக்கு இடப்பட்ட நிலத்திற்கு திருவாழிக்கல் நடப்பட்டது.நீர் நிலம் நன்செய் எனவும் மேட்டு நிலம் புன்செய் என அழைக்கப்பட்டது.நத்தம்,தோட்டம் என்ற வழக்கும் புழக்கத்தில் இருந்தது.
இறைவன் கோயிலுக்கு அளிக்கப்படும் கொடை இறையிலி என அழைக்கப்பட்டது.சிவன் கோயிலுக்கு அளிக்கப்பட்ட இறையிலி தேவதானம் என அழைக்கப்பெற்று திருமால் கோயிலுக்கு அளிக்கப்பட்ட இறையிலிக்கு திருவிடையாட்டம் என்று பெயர்.  சமண மற்றும் புத்த கோயில்களுக்கு அளிக்கப்பட்ட கொடை பள்ளிச்சந்தம் என அழைக்கப்பட்டது. பிரமணர்களுக்கு  வழங்கப்பட்டது பிரமதேயம்;பட்டவிருத்தி எனவும்,மடங்களுக்கு வழங்கப்பட்டது மடப்புறம் எனவும் புலவர்களுக்கு அளிக்கப்பட்ட கொடை முற்றூட்டு என்றும் ,சோதிடர்களுக்கு அளிக்கப்பட்ட கொடைகணிமுற்றூட்டு எனவும்  அழைக்கப்பட்டன.
துலாம்,பலம், குறுணி, கலம் என்பவை அளவைகள் ஆகும்
பாண்டிய மன்னர்களின் ஆட்சியில்  தங்கம் மற்றும் செம்பால்  செய்யபட்ட  நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன.மீன் சின்னம் பொருத்தப் பட்டதாக வெளியிடப்பட்டது பாண்டியர் ஆட்சிக் கால நாணயங்கள்.
சீமாறன் சீவல்லபவன் - அவனிப சேகரன் கோளலிக என்ற பெயரில் நாணயம் வெளியிட்டான்.இதற்குச் சான்றாக சித்தன்ன  வாசல் கல்வெட்டு விளங்குகின்றது.முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியன் சோணாடு கொண்டான் நாணயம் வெளியிட்டான் சீவல்லபன் "அவனிப சேகரன் கோளகை" என்ற பெயரில் வெளியிட்டான்.1253 ஆம் ஆண்டில் வீரபாண்டியன் "வாளால் வழி திறந்தான் குளிகை" என்ற பெயரில் நாணயத்தினை வெளியிட்டான்.

பாண்டியர் ஆட்சியில் ஊர் தோறும் ஊரவை இருந்துவந்தது.குடவோலை முறையில் ஊர்த் தலைவரை தேர்ந்தெடுத்தனர்.சிற்றூர் பல சேர்ந்து கிராம சபை அமைத்தனர்.நிலமும், கல்வியும், மனையும்,அறநெறியும் உடையவர்கள் மட்டுமே ஊரவை உறுப்பினர்களாக முடியும் நீதி விசாரணைக்கு ஊரவையில் உட்கழகங்கள் இருந்தன.வாரியங்கள் என்ற பெயரில் இவை அமைந்தன. அவை :-

  • சம்வற் சரவாரியம் - நீதி வழங்கும்,அறநிலையங்களை கண்காணிக்கும்.
  • ஏரிசவாரியம் - நீர் நிலை, பாசனம்  கண்காணிப்பது.
  • தோட்ட வாரியம் -   நிலங்களை அளப்பது,கண் காணிப்பது.
  • பொன் வாரியம் - நாணயங்களை வெளியிடுவது,கொடுப்பது.
  • பஞ்சவாரியம் - வரி வசூலிப்பது
அவை உறுப்பினர் பெருமக்கள்,ஆளுங்கணக்கர் என்றழைக்கப்பட்டனர்.இவர்கள் ஓராண்டு ஊதியமின்றி பணிபுரிவர்.வணிகர்கள் கூடமாக செல்வது வணிக சாத்து எனப்பட்டது  வணிகர்களில் சிறந்தவர் எட்டி எனப்பட்டனர்
பாண்டியர் காலத்தில்   குட ஓலை முறை இருந்தது நெல்லை மாவட்டத்தில் உள்ள மானூர்  கல்வெட்டு ஊரவை உறுப்பினரின் தகுதி பற்றி குறிப்பிடுகிறது  
பதிவு அலுவலகம் பாண்டியர் காலத்தில் ஆவணக்களரி என்றழைக்கப்பட்டது. நால்வகைப் படைகளினையும் வைத்திருந்தனர் பண்டைக் காலத்தில் தமிழகத்தின் பாண்டி நாட்டில் தான் வணிகமும்,வெளிநாட்டார் தொடர்பும் சிறப்புற்று இருந்தது.கல்வியின் சிறப்பை நெடுஞ்செழியன்   போல் யாரும் பாண்டியராட்சியில் கூறியதில்லை
கோயில்களுக்கு நிபந்தங்கள்,இறையிலிகள் விடப்பட்டன.கோயில் வழிபாட்டுத் தலமாக அன்றி பொருள்  மற்றும் பணம்  சேர்த்து வைக்கும் இடமாகவும் விளங்கியது.கோயிலின்

அரசன் பிறப்பிக்கும் ஆணை திருமுகம், போரில் இறந்த வீரர்களின் குடும்பத்திற்கு உதிரப்பட்டி என்ற இறையிலி நிலம் அளிக்கப்பட்டது.













































































சேரர்கள்

பண்டைய தமிழகத்தினை ஆண்ட மரபினர்களுள் ஒருவர்கள்  சேரர்கள் இவர்களின்  கொடி  வில் கொடி  இவர்கள்  தலை நகரம்  வஞ்சி. முசிறி சேர நாட்டின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாகும். இத் துறைமுகத்தின் நடவடிக்கைகள் பற்றியும், அதன் வளங்கள் பற்றியும் பண்டைத் தமிழ் நூல்களிலே குறிப்புக்கள் உள்ளன. சேர நாட்டின் இன்னொரு புகழ் பெற்ற துறைமுகம் தொண்டியாகும்.
முற்காலச் சேரர்களைப் பற்றி மிகவும் அரிதாகவே செய்திகள் உள்ளன, ஆனால் சங்க காலச் சேரர்களைப் பற்றி சிறிதளவு செய்திகள் உள்ளன.
சங்க நூல்கள் பலவற்றில் சேர மன்னர்கள் பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. மிகப் பழைய சங்க நூல்களில் ஒன்றாகிய பதிற்றுப்பத்து பத்து சேர மன்னர்களைப் பாடிய பாடற் தொகுப்பு ஆகும். இதில் ஒவ்வொரு சேர மன்னன் பற்றியும் பத்துப் பாடல்கள் உள்ளன.


சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் முற்காலச் சேர அரசர்களுள் ஒருவன். இவனைப் போற்றி முரஞ்சியூர் முடிநாகனார் என்னும் புலவர் பாடியுள்ளார். இவ்வரசன் பாரதப் போர் நிகழ்ந்ததாகக் கருத்தப்படும் கி.மு. 1200 ஆண்டு வாக்கில் வாழ்ந்தவர் என கருத இடமுண்டு என்று சில ஆசிரியர்கள் கருதுகின்றனர்.

உதியஞ்சேரலாதன் - கி.பி. 45-70

உதியஞ்சேரலாதன் கி.பி. முதல் நூற்றாண்டின்  சேர அரசன். இவன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். இஉதியஞ்சேரலின் மக்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் எல்கெழு குட்டுவனும் ஆவர். சோழன் கரிகாலனுடன் வெண்ணிப்பறந்தலை என்னும் இடத்தில் போரிட்ட பொழுது தவறுதலாக முதுகில் புண்பட்டதால் நாணி வடக்கிருந்து உயிர்துறந்ததாகக் கூறுவர். இச்செய்தியை சங்ககாலப் புலவர்கள் மாமூலர், வெண்னிகுயத்தியார், கழாத்தலையார் ஆகியோர் கூறுகின்றனர்.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் - கி.பி. 71-129

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் உதியஞ்சேரலாதன் என்னும் சேர மன்னனின் மகன்.  இவனுக்குப் பின் சேரநாட்டை ஆண்ட செங்குட்டுவன்  இவனது தம்பி. செங்குட்டுவன் இமயம் வரை படை நடத்திச் சென்றவன் என்னும் பொருளில் இவன் "இமயவரம்பன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளான்.வட இந்தியாவில், நந்த மரபினருடைய வலிமை குன்றி மௌரியப் பேரரசு வலுவடைந்து வந்தது. இக் காலத்திலேயே இமயவரம்பன் சேர நாட்டை ஆண்டதாகக் கருதப்படுகிறது. இவன் படை நடத்திச் சென்று இமயம் வரையிலும் உள்ள பல அரசர்களை வென்றதாகத் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. வடக்கில் உள்ள இமயத்தையும், தெற்கின் குமரிக்கும் இடைப்பட்டிருக்கும் பரந்த நாட்டில் உள்ள அரசர்களை  தோற்கடித்துச் சிறைப்பிடித்தவன் என்னும் பொருளில் இவனைப் பற்றிப் பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது . வேற்பஃறடத்துப் பெருநற்கிள்ளி என்னும் சோழ மன்னனோடு ஏற்பட்ட போரில் காயமுற்றான்.  போரில் தனக்கு முதுகில் ஏற்பட்ட புண்ணினால் வெட்கமடைந்து வடக்கிருந்து இவன் மாண்டான் எனப் புறநாநூறு கூறுகிறது.

பல்யானைச் செல்கெழுகுட்டுவன் - கி.பி. 80-105

பல்யானைச் செல்கெழுகுட்டுவன் தனது  தமையனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் சோழ மன்னனுடனான போரில் இறந்த பின்னர் இவன் அரசனானான். சங்க கால இலக்கியமான பதிற்றுப்பத்தின் மூன்றாம் பத்து இவன்மீது பாடப்பட்டது. இது தவிர வேறு சங்கப் பாடல்கள் எதிலும் இவனது பெயர் காணப்படவில்லை. 25 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி புரிந்த இவன், நெடும் பாரதாயினார் என்னும் தனது குருவுடன் காட்டுக்குத் தவம் செய்யச் சென்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இவனது ஆட்சிக் காலத்தில் பல போர்களில் ஈடுபட்டுச் சேர நாட்டின் ஆதிக்கத்தைப் பரப்பியதாகத் தெரிகிறது. நன்னன் என்னும் மன்னனைத் தோற்கடித்தான் என்பது போன்ற தகவல்கள் பதிற்றுப்பத்தில் காணப்படுகின்றன.

சேரன் செங்குட்டுவன் - கி.பி. 129-184

சேரன் செங்குட்டுவன் பண்டைத் தமிழகத்தின் முதன்மையான மூன்று அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒரு புகழ் பெற்ற மன்னன் ஆவான். இவன் கி.பி. முதலாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சேரநாட்டை ஆண்டதாகக் கருதப்படும் சேரலாதன் என்னும் மன்னனுக்கும், ஞாயிற்றுச் சோழன் என்னும் சோழ மன்னனுடைய மகள் நற்சோணைக்கும் பிறந்தவன். சேரநாடு மிகவும் வலிமை குன்றியிருந்த நேரத்தில் அதன் அரசுப் பொறுப்பை ஏற்ற செங்குட்டுவன் அதனை மீண்டும் ஒரு வலிமை மிக்க நாடாக்கினான்.
செங்குட்டுவன் பற்றிய தகவல்கள் சங்க நூல்கள் எதிலும் காணப்படாமையால் இவன் சங்க காலத்துக்குப் பிற்பட்டவன்  இவன் சிலப்பதிகாரக் காப்பியத் தலைவியான கண்ணகிக்குச் சிலை எடுத்தபோது இலங்கையின் முதலாம் கயவாகு மன்னன் சேரநாட்டுக்கு வந்ததாகவும், அவன் பத்தினி (கண்ணகி) வணக்கத்தை இலங்கையில் பரப்பியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளதால் செங்குட்டுவன் முதலாம் கயவாகு வாழ்ந்த காலத்தைச் சேர்ந்தவன் என்பது கருதபடுகிறது      முதலாம் கயவாகு கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன் என்பது இலங்கை வரலாற்று நூலான மகாவம்சம் போன்ற நூல்களில் இருந்து தெரிய வருவதால், செங்குட்டுவனும் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவன் என்று கூற முடியும்.
சிலப்பதிகாரம் அதன் வஞ்சிக் காண்டத்தில் சேரன் செங்குட்டுவன் பற்றிய பல தகவல்களைத் தருகிறது. தமிழ்ப் புலவர் சாத்தனார் மூலம் கண்ணகியின் கதையைக் கேட்ட சேரன் செங்குட்டுவன், கண்ணகிக்குச் சிலை எடுத்துக் கோயில் அமைக்க எண்ணினான். அதற்காகப்  தமிழ் மன்னர்களை எள்ளி நகையாடிய வடநாட்டு வேந்தரான கனக விஜயரை வென்று, இமயமலையில் கல்லெடுத்து, அவர்கள் தலையிலேயே கற்களைச் சுமந்து வர செய்து  கங்கை ஆற்றில் நீர் எடுத்து  சேர நாட்டுக்குக் கொண்டுவந்து சிலை அமைத்ததாக  சிலப்பதிகாரம் கூறுகிறது.

அந்துவஞ்சேரல் இரும்பொறை

அந்துவஞ்சேரல் இரும்பொறை  இரும்பொறை என்னும் மரபைத் தொடக்கி வைத்தான்   இவனது வழி வந்தவர்களே இரும்பொறை அல்லது பொறையன் என அழைக்கப்பட்டார்கள்.

செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை - கி.பி. 123-148

செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை முடிக்குரிய இளவரசனும் இவனது தமையனுமான மாந்தரன் சேரல் இரும்பொறை என்பவன் இறந்துவிட்டதால், வாழியாதன் இரும்பொறை அரசனானான். சங்கத் தமிழ் தொகை நூலான பதிற்றுப்பத்தில், கபிலர் பாடிய ஏழாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் இவன். இவனுடைய பல்வேறு குண நலன்களைப் பற்றிப் பதிற்றுப்பத்தில் கபிலர் புகழ்ந்து கூறியுள்ளார். இவன் திராவிடக் கடவுளான மாயோனை வணங்கி வந்தான்.
இவனுடைய காலத்தில் தமிழகத்தில் பௌத்தம் பரவத் தொடங்கியிருந்தது. இக்காலத்தில் புத்த துறவிகளுக்குப் படுக்கைகள் செய்து கொடுப்பது அறமாகக் கருதப்பட்டது. இவ்வாறு கட்டப்பட்ட படுக்கைகளுக்கு அருகே இக் கொடைகளைக் குறிக்கும் கல்வெட்டுக்களும் வெட்டப்பட்டன. கரூருக்கு அண்மையில் புகழூர் என்னும் இடத்தில் காணப்படும் புகழூர்க் கல்வெட்டு என அறியப்படும் இத்தகையதொரு கல்வெட்டு "கோ ஆதன்" என்பவன் பற்றிக் குறிப்பிடுகிறது. இது வாழியாதன் இரும்பொறையே எனத் தொல்லியலாளர் கருதுகின்றனர்.

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை - கி.பி. 148-165

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை இவனது தந்தையான செல்வக் கடுங்கோ ஆழியாதன் இரும்பொறைக்குப் பின் சேர நாட்டின் அரசன் ஆனான்.  சங்கத் தமிழ் இலக்கியமான பதிற்றுப்பத்தின் எட்டாம் பத்து இவன்மீது பாடப்பட்டது. அரிசில்கிழார் என்னும் புலவர் இதனைப் பாடியுள்ளார். தகடூர் மீது படையெடுத்து அதன் மன்னன் அதியமானை வென்றதன் மூலம் இவனுக்குத் தகடூர் எறிந்த என்னும் சிறப்புப்பெயர் வழங்கியது. களைப்பு மிகுதியால் முரசு கட்டிலில் ஏறித் துயில் கொண்டு விட்ட மோசிகீரனார் என்னும் புலவர் துயில் கலையும் வரை கவரி வீசினான் இவன் என்று புகழப்படுகிறான்.கருரைச் சேர நாட்டின் தலைநகர் ஆக்கியவன் இவன் என்றும் கருதப்படுகிறது.

இளஞ்சேரல் இரும்பொறை - கி.பி. 165-180

இளஞ்சேரல் இரும்பொறைகுப பாண்டியர், சோழர், குறுநில மன்னர்கள் எனப் பல முனைகளிலுமிருந்து எதிர்ப்புக்கள் இருந்தன எனினும் அவற்றைச் சமாளித்து 16 ஆண்டுகள் ஆட்சி செலுத்தினான். சங்கத் தமிழ் நூலான பதிற்றுப்பத்தின் ஒன்பதாவது பத்தின் பாட்டுடைத் தலைவன் இவனாவான். பெருங்குன்றூர் கிழார் என்பவர் இதனைப் பாடியுள்ளார்.இவன் கோப்பெருஞ் சோழனின் தலைநகரான உறையூரைத் தாக்கிக் கைப்பற்றினான் எனினும், இவன் உறையூரைத் தாக்கியமை சேரர்களின் வீழ்ச்சிக்கு வித்திட்டது எனலாம்.

குட்டுவன் கோதை - கி.பி. 184-194

குட்டுவன் கோதை  சேர நாட்டின் ஒரு பகுதியான குட்டநாட்டை ஆண்டவன். இவனைக் குறித்த தகவல்கள் சங்கத் தமிழ் இலக்கியமான புறநானூற்றின் மூலமே கிடைக்கின்றது. கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் என்னும் புலவர் பாடிய பாடல் ஒன்று புறநானூற்றின் 54 ஆம் பாடலாகச் சேர்க்கப்பட்டுள்ளது. புகழ் பெற்ற சேர மன்னனான செங்குட்டுவனின் மகனான குட்டுவன் சேரலும் இவனும் ஒருவனே என்பாரும் உளர்.

சேரமான் வஞ்சன்

சேரமான் வஞ்சன் பாயல் என்னும் மலைப் பகுதியை ஆண்ட சிற்றரசன். திருத்தாமனார் என்பவர் பாடிய புறநானூற்றுப் பாடல் ஒன்றின் மூலமே இவன் பற்றிய தகவல்கள் தெரிய வந்துள்ளன. வஞ்சன் என்னும் பெயர் காரணப் பெயராக இருக்கலாம் எனத் தெரிகிறது. இவனது இயற்பெயர் தெரியவரவில்லை.

கணைக்கால் இரும்பொறை

சேரமான் கணைக்கால் இரும்பொறை  சோழன் செங்கணான் என்பவனோடு போரிட்டு அவனால் பிடிக்கப்பட்டுச் சிறையில் இருந்தவன். சிறையில் தாகத்துக்குத் தண்ணீர் கேட்டபோது காவலர் காலந்தாழ்த்திக் கொடுத்ததால் அதனைக் குடியாது ஒரு செய்யுளைப் பாடிவிட்டு வீழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. தனது நிலைக்கு இரங்கிப் பாடிய இச் செய்யுள் புறநானூற்றின் 74 ஆவது பாடலாக உள்ளது.

சங்க காலம்

சங்க காலம் என்பது கி.மு. 2ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 2ம் நூற்றாண்டு வரையான காலம்  இந்தக் கால கட்டத்தில் ஆட்சி செய்த தமிழ் மன்னர்களைப் பற்றி மிக குறைவான தகவல்களே கிடைத்துள்ளன.
தொல்காப்பியத்திலும், புறநானூற்றிலும் சேர, சோழ, பாண்டியர்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மெகஸ்தனிஸ் பாண்டியர்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். சந்திரகுப்த மௌரியரின் மந்திரி கௌடில்யரும் பாண்டியர்களைக் குறிப்பிட்டுள்ளார். மஹாபாரதமும், ராமாயனமும் சேர, சோழ, பாண்டியர்களைப் பற்றி குறிப்பிடுகிறது.
அசோகரின் குறிப்புகளும் தனது நாட்டின் தெற்கு எல்லையில் உள்ள அரசுகள் என்று சேர, சோழ, பாண்டிய நாடுகளைப் பற்றிக் கூறுகிறது. ரோமுக்கும் இந்தியாவிற்குமிடையில் பெருகி வந்த வர்த்தகத்தை தாலமி குறிப்பிடுகிறார்.
சங்க காலத்தின் இறுதியில் மதுரையைக் கைப்பற்றிய களப்பிரர்கள் சங்க காலச் சிறப்புகள், தகவல்களை அழித்து விட்டதாக கூறப்படுகிறது.இவர்களது  காலம் தமிழக வரலாற்றில் இருண்ட காலம் என குறிப்பிடப்படுகிறது
இலக்கியங்கள்  தரும் சான்றுகளிலிருந்து தமிழகத்தின் வரலாற்றுக்கு உட்பட்ட காலம் சங்ககாலம் என்பது பெறப்படுகிறது. இக்காலம் தமிழ் இலக்கிய வரலாற்றில் பொற்காலம் என்று கருதப்படுகிறது. இக்காலத்தில் பாண்டியன், சோழன், சேரன் என்ற முப்பெரும் மன்னர்கள்  அரசாண்டு வந்தனர். பாண்டியரின் தலைநகரம் மதுரை; சோழர்களின் தலைநகரம் காவிரிப்பூம்பட்டினமும்(புகார்) உறையூரும் ஆகும். சேரனின் தலைநகரம் வஞ்சி.
சங்க கால பாடல்களே சங்ககாலத் தமிழகத்தின் நாகரிகத்தையும், பண்பாட்டையும் உணர்த்துகின்றன. 'சங்கம்' என்னும் சொல் (புலவர் கூட்டம் என்ற பொருளில்) சங்க இலக்கியம் ஒன்றிலேனும் இடம் பெறவில்லை.  இதற்கு நேரான தமிழ்ச் சொற்கள் கூடல், அவை, மன்றம் போன்றவை ஆகும்.  பண்டைத் தமிழகத்தில் தமிழ்ப் புலவர்கள் கூடித் தலை, இடை, கடை என்று மூன்று சங்கங்கள் அமைத்து, அவற்றின் வாயிலாகத் தமிழ் வளர்த்தார்கள்
தமிழ்ச் சங்கத்தைப் பற்றிய குறிப்புகள் இறையனார் களவியல் உரையில் தான் முதன் முதலாகக் காணப்படுகின்றன. தலைச் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என்ற மூன்று சங்கங்களைப் பற்றிய வரலாற்றை அவ்வுரை சுருக்கிக் கூறுகின்றது. திருவிளையாடற் புராண ஆசிரியர் பரஞ்சோதி தம் நூலில் தமிழ்ச் சங்கத்தைப் பற்றிப் பாடியுள்ளார். வில்லிபுத்தூராரும், தாம் பாடிய பாரதத்தில் 'நன்றறிவார் வீற்றிருக்கும் நன்மாடக் கூடல்' என்று மதுரையைப் புகழும்போது 'நன்றறிவார்' எனச் சங்கப் புலவர்களைக் குறிப்பிடுகிறார்.
முதல் சங்கம் 
குமரிக் கண்டத்திலிருந்த தென்மதுரையில் முதற் சங்கம் நடைபெற்று வந்தது. சிவபெருமான், அகத்தியனார், முருகக் கடவுள், முரஞ்சியூர் முடி நாகனார், குபேரன் முதலாய 549 புலவர் அதன்கண் அமர்ந்து தமிழ் வளர்த்தனர். அச்சங்கத்துடன் தொடர்பு கொண்டிருந்த புலவர்களின் எண்ணிக்கை 4449. அவர்கள் பரிபாடல்கள் பலவற்றையும், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை என்ற நூல்களையும் இயற்றினார்கள். இந்தத் தலைச் சங்கம் தொடர்ந்து 4440 ஆண்டுகள் நடைபெற்றது. காய்சின வழுதி முதலாகக் கடுங்கோன் ஈறாகப் பாண்டிய மன்னர் 89 பேர் இச்சங்கத்தைப் பாதுகாத்து வந்தார்கள். அக்காலத்தில் எழுந்த நூல்களுக்கு இலக்கணமாக இருந்த நூல் அகத்தியம்.
இடை சங்கம் 
  கபாடபுரத்தில்  இடைச் சங்கம் செயல்பட்டது . தொல்காப்பியர், இருந்தையூர்க் கடுங்கோழியார், மோசியார், வௌ¢ளூர்க் காப்பியனார், சிறுபாண்டரங்கனார், திரையன் மாறனார், துவரைக்கோன், கீரந்தையார் முதலிய 59 பேர் இச்சங்கத்தினை வளர்த்தனர்  . அவர்களுடன் இச்சங்கத்தில் பாடிய புலவர்களின் எண்ணிக்கை 3700. வெண்டேர்ச் செழியன் முதலாக முடத்திருமாறன் ஈறாக 59 பாண்டிய மன்னர்கள் இச்சங்கத்தின் புரவலர்களாய்த் திகழ்ந்தனர். அவர்களுள் ஐவர் தாமே புலவர்களாகவும் அச்சங்கத்தில் அமர்ந்திருந்தனர். இச்சங்கம் 3700 ஆண்டுகள் நடைபெற்றது. இச்சங்கத்துக்கு அகத்தியமும், தொல்காப்பியமும் இலக்கண நூல்களாகத் திகழ்ந்தன.
கடை சங்கம்
 கடைச்சங்கம் தற்போதைய மதுரையில் செயல்பட்டது  இச்சங்கத்தில் அமர்ந்து தமிழ் வளர்த்த புலவர்கள் 49-பேர். இவர்களுள் மூவர் பாண்டிய மன்னர். சேந்தம் பூதனார், அறிவுடையரனார், பெருங்குன்றூர்கிழார், இளந்திருமாறன், மதுரையாசிரியர் நல்லந்துவனார், மருதனிள நாகனார், கணக்காயனார் மகனார் நக்கீரனார் ஆகிய புலவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் உள்ளிட்ட 449பேர் பாடினர். இயற்றப்பட்ட நூல்கள் நெடுந்தொகை நானூறு, நற்றிணை நானூறு, குறுந்தொகை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலிநூற்றைம்பது, பரிபாடல் எழுபது, கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை முதலியன. கடைச் சங்க காலத்தில் வழங்கிய இலக்கண நூல் தொல்காப்பியம். இச்சங்கம் 1850 ஆண்டுகள் நீடித்தது. இக்கடைச் சங்கத்தை மதுரையில் நிறுவியவன் பாண்டியன் முடத்திருமாறன் என்னும் மன்னன். இதன் இறுதி ஆண்டுகளில் அரசாண்டவன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி. இவ்வாறு களவியல் உரை கூறுகிறது.
பாண்டிய மன்னர் அவையில் புலவர்கள் பலர் வீற்றிருந்த வரலாற்றை வேள்விக்குடிச் செப்பேடு குறிப்பிடுகின்றது.
கடைச் சங்கப் பாடல்களில், சங்கம் இருந்தமைக்குரிய  அகச் சான்றுகள் பல உள்ளன.
மேலும், தொல்காப்பியம்  வேறுபல நூல்களிலும் சங்கம் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.
கி.பி. 7-ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர், நேரடியாகவே 'சங்கம்' என்ற குறிப்பும் சொல்வழக்கும் பல பாடல்களில் இடம் பெற்றுள்ளன.
மதுராபுரிச் சங்கம் வைத்தும் என்று சின்னமனூர்ச்செப்பேடு குறிப்பிடுகிறது
கபாடபுரம் பாண்டியனுடைய தலைநகராய் இருந்த பிறகு தென்மதுரை தலைநகராக மாறியதற்கு இராமாயணம், மகாபாரதம், கௌடில்யரின் அர்த்த சாத்திரம் ஆகிய நூல்களில் சான்றுகள் கிடைக்கின்றன.
கன்னியாகுமரிக்குத் தெற்கில் துறைமுகம் ஒன்று இருந்ததாகப் பிளினி கூறுகின்றார்.  வட மதுரையானது பாண்டிய நாட்டின் தலைநகராவதற்கு முன்பு பாண்டியர்கள் அதற்குத் தென்பால் கபாடபுரத்தில் அமர்ந்தும், அதற்கும் முன்பு மேலும் தெற்கில் அமைந்திருந்த தென்மதுரையிலிருந்தும் ஆட்சி புரிந்து வந்தனர் என்ற வரலாறு உண்மையே என்று பேராசிரியர். கே.கே. பிள்ளை போன்றோர் உறுதிப்படுத்துகின்றனர்.


.

சங்கம்

முதற்சங்கம் (கி.மு 7000) ஆண்டளவில் நடந்ததெனக் இறையனார் அகப் பொருளுரை என்ற நூலில்    சில கருத்துகள் உள்ளன.முதற்சங்கம் தென்மதுரையில்  இருந்தது அங்கு சிவன் தலைச்சங்கத்திற்குத் தலைவனாகவிருந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 4440 ஆண்டுகள் இச்சங்கம் நிலைத்திருந்ததாகவும், 4449 புலவர்கள் இருந்து தமிழாய்ந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது. அகத்தியர் தனது அகத்தியம் என்ற நூலை இச்சங்கத்தில் தான் அரங்கேற்றினார்   என்று கருதப்படுகிறது    பஃறுளி ஆறும் பன்மலை அடுக்கும் முதற் கடற்கோளால் அழிவுற்றன. இக்காலம் கி.மு (400-2000). இக்கருத்துகளின் உண்மையை உறுதி செய்ய தமிழ் இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள ஒரு சில செய்திகளைத் தவிர்த்து வேறு தொல்லியல் உறுபகரும் சான்றூகள் ஏதும் கிடைக்கவில்லை.
இடை சங்கம் : இடை சங்கம் கபாடபுரத்தில் நடைபெற்றது
கடைச்சங்கம் (கி.மு. 300 - கி.பி. 300) சங்க காலம் எனப் பொதுவாகக் அழைக்கப்பட்டது. "கடைச்சங்கம் மதுரையில் நடந்தது. 449  புலவர்கள்  இங்கு பங்களித்தனர்.