Tuesday, October 26, 2010

சுதந்திர போராட்ட வீரர்கள்

அன்னி பெசன்ட் அம்மையார்.
1847ம் ஆண்டு அக்டோபர் முதல் தேதி லண்டனில் பிறந்தார் அன்னி பெசன்ட். இவரது பெற்றோர் டாக்டர் வில்லியம் பேஜ்வுட்- தாயார் எமிலி.1866ல் பிராங்க்பெசண்ட் என்பவரை  திருமணம் செய்து கொண்டார்.சமூக சேவையில் ஆர்வம் கொண்டு 1875 நவம்பர் 17ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள பிரம்ம ஞான சபையில் இணைந்தார். மத நல்லிணக்கம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்ட இந்த அமைப்பின் தலைவராக 1891ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். இதன் பின்னர் மத நல்லிணக்கத்தை பரப்பும் நோக்கில் இந்தியா வர விரும்பினார் அன்னி பெசன்ட். இதற்காக அப்போதைய ஆங்கில அரசுடன் கடுமையாக போராடி அனுமதி பெற்று, 1893ம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி இந்தியா வந்திறங்கினார். 1913இல் காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்தார். 1917இல்  மாதர் சங்கம் அமைத்தார் .பால்ய விவாகம், உடன்கட்டை ஏறுதல், தீண்டாமை போன்றவற்றையும் எதிர்த்து குரல் கொடுக்க ஆரம்பித்தார் அன்னி பெசன்ட்.பெண் கல்வி‌க்காக சிறப்புக் கவனம் செலுத்தினார். இதற்காக 1898இல் காசியில் மத்திய இந்துக் கல்லூரி, 1904இல் மத்திய உயர் நிலைப்பள்ளி ஆகியவற்றை அமைத்தார். "இந்தியாவே விழித்தெழு" என்பதுதான் அவரது சொற்பொழிவின் சாராம்சம். 1904இல் 'பொதுநலம்' என்ற வார இதழையும், 'புது இந்தியா' என்ற நாளிதழையும் தொடங்கினார். சுதந்திர வேட்கையை மக்களிடம் தூண்டுவதற்காக இப்படி அவர் நடத்திய பத்திரிகைகளின் எண்ணிக்கை 18. இதுதவிர, ராமாயணம், மகாபாரதம், இதிகாசங்கள், வீரர்கள், பெண்கள் போன்ற தலைப்புகளில் அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை 362   அன்னி பெசன்ட் அம்மையார் 1933 செப்டம்பர் 20ஆம் தேதி தனது 86ஆம் வயதில் மரணம் அடைந்தார்.

வீரபா‌ண்டிய க‌ட்டபொ‌ம்ம‌ன்: 
பா‌ஞ்சால‌‌ங்கு‌றி‌‌ச்‌சி பாளை‌ய‌த்தை ஆ‌ட்‌சி செ‌ய்து வ‌ந்த ‌வீர‌பா‌‌ண்டிய க‌ட்டபொ‌ம்ம‌ன்ஆ‌ங்‌கிலேய‌ர்களு‌க்கு வ‌ரி செலு‌த்த மறுத்து வ‌ந்தா‌ர். ஆ‌ங்‌கிலேய‌ரி‌ன் வரி வசூ‌ல் கொ‌ள்கையே ஆ‌ங்‌கிலேயரு‌க்கு‌ம், க‌ட்டபொ‌ம்மனு‌க்கு‌ம் இடையே ‌விரோத‌ம் ஏ‌ற்பட மு‌க்‌கிய காரணமாக அமை‌ந்தது. ராமநாதபுர‌ம் ஆ‌ட்‌சிய‌ர் வ‌ரியை உடனடியாக செலு‌த்துமாறு ‌வீரபா‌ண்டிய க‌ட்டபொ‌ம்மனு‌க்கு பல கடித‌ங்க‌ள் எழு‌தினா‌ர். ஆனா‌ல் க‌ட்டபொ‌ம்ம‌ன் அவ‌ற்றை ‌நிராக‌ரி‌த்தா‌ர். இதனா‌ல் கோபமு‌ற்ற ‌திருநெ‌ல்வே‌லி மா‌வ‌ட்ட ஆ‌ட்‌சி‌த் தலைவ‌ர் கா‌லி‌ன் ஜா‌க்ச‌ன் த‌ம்மை நே‌‌ரி‌ல் ச‌ந்‌தி‌க்கு‌மாறு ‌வீரபா‌ண்டிய க‌ட்டபொ‌ம்மனு‌க்கு க‌ட்டளை‌யி‌ட்டா‌ர். ஆ‌ங்‌கிலேய‌ர் ஜா‌க்ச‌ன் கட்டபொம்மனஅவமானப்படுத்நினைத்தவேண்டுமென்றஇடங்களுக்கஅலைக்கழித்தார். இறு‌தியாக  ‌ ‌வீரபா‌ண்டிய க‌ட்டபொ‌ம்ம‌ன் ராமநாதபுர‌ம் எ‌‌ன்ற இட‌த்‌தி‌ல் ஜா‌க்சனை‌ச் ச‌ந்‌தி‌த்தா‌ர். அ‌ங்கு க‌ட்டபொ‌ம்ம‌ன் ஆ‌ங்‌கிலேய‌ரி‌ன் வ‌ரி வசூ‌லி‌ப்பை எ‌தி‌ர்‌த்து ஜா‌க்ச‌னிட‌ம் கடுமையாக வா‌தி‌ட்டா‌ர். இதனா‌ல் ஆ‌த்‌திரமடை‌ந்த ஜா‌க்ச‌ன் க‌ட்டபொ‌ம்மனை சூ‌ழ்‌ச்‌சி‌‌யி‌ன் மூல‌ம் கைது செ‌ய்ய ‌நினை‌த்தா‌ர். ஆனா‌ல் க‌ட்டபொ‌ம்ம‌ன் அ‌ங்‌கிரு‌ந்து த‌ந்‌திரமாக த‌ப்‌பி‌த்து‌ச் செ‌ன்றா‌ர்.இதையடு‌த்து க‌ட்டபொ‌ம்ம‌ன் மருது சகோதர‌ர்களுட‌ன் இணை‌ந்து ஆ‌ங்‌கிலேய‌ர்களு‌க்கு எ‌திராகப் போர் தி‌ட்ட‌ம் ‌‌‌‌தீ‌ட்டினா‌ர். க‌ட்டபொ‌ம்ம‌ன் ‌சிவ‌கி‌ரி பாளைய‌த்தை தனது கூ‌ட்டமை‌ப்‌பி‌ல் சே‌ர்‌ப்பத‌ற்காக ‌சிவ‌கி‌ரி ‌மீது படையெடு‌த்து‌ச் செ‌‌ன்றா‌ர். ஆனா‌ல் ‌சிவ‌கி‌ரி பாளைய‌ம் ஆ‌ங்‌கிலேய‌ர்களு‌க்கு வ‌ரி செலு‌த்து‌ம் பாளையமாக இரு‌ந்ததா‌ல் ஆ‌ங்‌கிலேய‌ர்க‌ள் க‌ட்டபொ‌ம்ம‌னி‌ன் படையெடு‌ப்பை த‌ங்களது அ‌திகார‌த்‌தி‌ற்கு எ‌திரான ஒரு சவாலாக கரு‌தி‌ த‌ங்களது படைகளை ‌திருநெ‌ல்வே‌லி ‌மீது படையெடு‌க்குமாறு கட்டளை‌யி‌ட்டன‌ர். மேஜ‌ர் பான‌‌ன் தலைமை‌யிலான ஆ‌ங்‌கிலேய படைக‌ள் பா‌ஞ்சால‌ங்கு‌றி‌ச்‌சி கோ‌ட்டையை மு‌ற்றுகை‌யி‌ட்டது. பான‌ர்மேன் க‌ட்டபொ‌ம்மனை சரணடையுமாறு கோ‌ரினா‌‌ர். ஆனா‌ல் க‌ட்டபொ‌ம்ம‌ன் அதனை ஏ‌ற்க மறு‌த்து அ‌ங்‌கிரு‌ந்து த‌ப்‌பி‌த்து‌ச் செ‌ன்று பு‌து‌க்கோ‌ட்டை‌யி‌ல் உ‌ள்ள கள‌ப்பூ‌ர் கா‌ட்டி‌ல் தலைமறைவாக இரு‌ந்தா‌ர். இ‌ந்‌நிலை‌யி‌ல் புது‌க்கோ‌ட்டை அரச‌ர் விஜய ரகுநாத தொ‌ண்டைமா‌ன் க‌ட்டபொ‌ம்மனை கைது செ‌ய்து ஆ‌ங்‌கிலேய‌ர்க‌ளிட‌ம் ஒ‌ப்படை‌த்தா‌ர். இ‌ப்படியாக ஆ‌ங்‌கிலேயரை எ‌தி‌ர்‌த்து பலவகை‌யிலு‌ம் போராடிய ‌வீரபா‌ண்டிய க‌ட்டபொ‌ம்ம‌ன் 1799ஆ‌ம் ஆ‌ண்டு ‌அ‌க்டோப‌ர் மாத‌ம் 16ஆ‌ம் தே‌தி கய‌த்தாறு கோ‌ட்டை‌யி‌ல் தூ‌க்‌கி‌லிட‌ப்ப‌ட்டா‌ர். 


வ. உ. சிதம்பரம்பிள்ளை
கப்பல் ஓட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்றெல்லாம் தமிழர்களால் அறியப்பட்டவர்.சென்னையில் விவேகானந்தர் மடத்தைச் சேர்ந்த இராமகிருஷ்ணானந்தரின் சந்திப்பு வ.உ.சியின் உள்ளத்தில் விடுதலைக் கனலை ஓங்கச் செய்தது. அதன்பிறகே அவர் வாழ்வில் புது அத்தியாயம் தொடங்கியது. தூத்துக்குடி திரும்பியதும், கைத்தொழில்சங்கம், தருமசங்கம், நூல்நூற்பு நிறுவனம், தேசியப் பண்டகசாலை ஆகியவற்றை நிறுவி சுதேசியம் வளர்க்க ஆரம்பித்தார். வந்தே மாதர முழக்கங்களைத் துணிகளில் எழுதச் செய்து வீதிகள் தோறும் வீடுகள் தோறும் தேசிய உணர்வை வளர்த்தார். பாலகங்காதர திலகரின் விடுதலைப் போராட்டத்தில் மனதைபறிகொடுத்து, இந்திய சுதந்திரப் போராட்டத்தி்ற்காகப் பாடுபட்டார்.ஆங்கிலேய ஆதிக்கம் கடல்வழி வணிகத்தினால் தான் வளர்ந்தது என்கிற அடிப்படையில், அவர்களை விரட்ட, அவர்களுடைய கப்பல் கம்பெனிக்குப் போட்டியாக, 1906-ஆம் ஆண்டு "சுதேசி நாவாய்ச் சங்கம்" என்கிற சங்கத்தை நிறுவி அதன் செயலாளர் ஆனார். (அதன் தலைவர் மதுரை தமிழ்ச்சங்கத் தலைவர் பாண்டிதுரை தேவர்  சட்ட ஆலோசகர் சேலம் சி.விஜயராகவாச்சாரியார். அந்தக் கம்பெனியின் சார்பில் காலியா, லாவோ ஆகிய இரண்டு கப்பல்களை வாங்கி தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இயக்கத் தொடங்கினார். அதனால் கப்பலோட்டிய தமிழன் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.  ஆங்கிலேய அரசு, 1908-ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் நாள் விபின் சந்திரபாலர் விடுதலைக் கொண்டாட்டத்தின் போது அரசாங்கத்தை அவமதித்ததாகவும், சுதந்திரத்திற்காக பொதுமக்களைத் தூண்டியதாகவும் இவர்மேல் வழக்குப் பதிவு செய்து,                   இவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்தது.தீர்ப்பளித்தவர் திருநெல்வேலி ஜில்லா செஷன்ஸ் நீதிபதி ஏ.எஃப்.ஃபின்ஹே.அந்தத் தீர்ப்பினை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. முறையீட்டின் போது அந்தமான் அனுப்ப இயலாது என்பதால் கோவைச் சிறையில் அடைக்கப்பட்டார் வ.உ.சி. அங்கே தான் செக்கிழுக்க வைக்கப்பட்டார்.எனவே  செக்கிழுத்த செம்மல்  என்று அழைக்கப்பட்டார் . சென்னை உயர் நீதிமன்றம் அவருடைய தண்டனைக் காலத்தைப் பத்தாண்டுகளாகவும், லண்டன் பிரிவியூ கவுன்ஸில், ஆறு ஆண்டுகள் கடுங்காவலாகவும் குறைத்தன
 கோபால கிருஷ்ண கோகலே
கோபால கிருஷ்ண கோகலே, 1866 ஆம் ஆண்டு மே 9 அன்று மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள   கோதாலுக்கில் பிறந்தார்,  1884 ஆம் ஆண்டில் எல்பின்ஸ்டோன் கல்லூரியில் தன் பட்டப்படிப்பை முடித்தார். கோவிந்த் ரணடேவின் ஆதரவாளராக கோகலே இருந்தார் . 1889 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸின் உறுப்பினரானார்.அவர் தன்னுடைய எண்ணங்களில் மற்றும் மனப்பான்மையில் மிதமானவராக இருந்தார், இந்தியர்களின் உரிமைகளுக்கு ஆங்கிலேயர்களின் பெருமளவு மரியாதையைப் பெற்றுத்தரக்கூடிய பேச்சுவார்த்தை மற்றும் கலந்துரையாடல் செயல்முறையை வளர்த்தெடுப்பதன் மூலம் ஆங்கில அதிகாரிகளிடத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற எண்ணினார். 1895 இல் கோகலே திலகருடன் இணைந்து காங்கிரசின் இணைச் செயலாளர் ஆனார். இருவருமே கணித பேராசிரியர்களானார்கள் மற்றும் இருவருமே டெக்கன் கல்வி அமைப்பின் முக்கிய உறுப்பினர்களாக இருந்தனர். 1905 ஆம் ஆண்டில் கோகலே இந்தியத் தேசிய காங்கிரசின் தலைவரானார்.1907 இல் காங்கிரஸ் இரண்டாக உடைந்தது: கோகலே மற்றும் திலகர் முறையே காங்கிரசின் மிதமானவர்கள் மற்றும் "தீவிரவாதி"களின் தலைவரானார்கள் கோபால கிருஷ்ண கோகலே இந்தியச் சேவகர்கள் அமைப்பினை ஏற்படுத்தினார். 1899 ஆம் ஆண்டில், கோகலே மும்பை சட்ட பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1903 ஆம் ஆண்டு மே 22 அன்று அவர் இந்திய கவர்னர் ஜெனரலின் இந்தியப் பேரவைக்கு மும்பை பிராந்தியத்தை பிரதிநிதிக்கும் வகையில் பதவிவகிக்காத உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மகாத்மா காந்தி வளர்ச்சிபெற்று வந்த ஆண்டுகளில் கோகலே அவருக்கு மிகப் பிரபலமான அறிவுரையாளராக இருந்து வந்தார். தன்னுடைய சுயசரிதையில் காந்தி, கோகலேவை தன்னுடைய அறிவுரையாளர் மற்றும் வழிகாட்டி எனக் குறிப்பிடுகிறார்1915 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் நாள் கோகலே தம்முடைய நாற்பத்து ஒன்பதாவது வயதில் இறந்தார் 
தாதாபாய் நௌரோஜி 
(Poverty and Un-British Rule in India) என்ற நூலினை எழுதினர் . 1870 ஆம் ஆண்டு இந்தியாவின் தலா வருமானத்தைக் கணக்கிட்டு ரூ.20 என்று கக்கிட்டார் . இந்தியாவின் பொருளாதார வள ஆதாரங்கள் சுரண்டப்படுகின்றன என்று முதன் முதலில் பட்டியலிட்டார். காந்தி  தாதாபாய் தனக்குத் தலைவர் என்றும் வழிகாட்டி என்றும் குறிப்பிட்டார். 
லாலா லஜபத் ராய்
லாலா லஜபத் ராய், 1865 ஆம் ஆண்டு சனவரி 28 ஆம் தேதி, இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் துதி கே என்னும் ஊரில் பிறந்தார்.1888 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸின் உறுப்பினரானார்.  திலகர், பிபின் சந்திர பால் மற்றும் லாலா லஜபத் ராய் ஆகியோரை லால்-பால்-பால் என அழைப்பர். 1927 இல் சைமன் குழு இந்தியாவிற்கு வந்த போது நடைபெற்ற எதிர்ப்பு போராட்டத்தில் தடியடி பட்டு இறந்தார் 
பகத் சிங் 
  செப்டம்பர் 27, 1907 இல் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லயல்புரில் பிறந்தார்.இவர்  இந்தியாவின் முதலாவதுமாக்ஸ்யாவதி என சில வரலாற்றாசிரியர்களால் குறிக்கப்படுவதுண்டு லாலா லஜபத் ராய் இறப்புக்குக் காரணமாயிருந்த  உதம் சிங் என்ற காவலதிகாரியைச் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக பகத் சிங் 24வது வயதில் தூக்கிலிடப்பட்டார்.


No comments:

Post a Comment