Monday, August 30, 2010

இந்திய அரசியலமைப்பு

இந்தியாவின் முதல் அரசியலமைப்பு சபைக் கூட்டம் டிசம்பர்- 9, 1946-ம் ஆண்டு நடை பெற்றது. 
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் நவம்பர் 26, 1949.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது ஜனவரி 26, 1950.
இந்திய அரசியலமைப்பு சபையின் தற்காலிக தலைவராக சச்சிதானந்த சின்ஹா செயல் பட்டார்.  
பின்னர் டாக்டர் இராஜேந்திர பிரசாத் இந்திய அரசியலமைப்பு சபையின் தலைவராக ( Chairman of the Constitute Assembly ) தேர்வு செய்யப்பட்டார்   
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்கள் வரைவுக் குழுவின் தலைவராக ( Chairman of the Drafting Committee )   தேர்வு செய்யப்பட்டார்
இந்திய அரசியலமைப்பு உலகிலேயே  மிக விரிவாக எழுதப்பட்ட ஆவணமாகும். 
இந்திய அரசியலமைப்பு "கூட்டாட்சி முறை' என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.
இந்திய அரசியலமைப்பு வரையப்பட்டபோது இருந்த சரத்துகள் மற்றும் பட்டியல்களின் எண்ணிக்கை
395 சரத்துகள்,
8 பட்டியல்கள்.
தற்போது இந்திய அரசியலமைப்பில் உள்ள சரத்துகள் மற்றும் பட்டியல்களின் எண்ணிக்கை 
444 சரத்துகள், 
12 பட்டியல்கள்.
இந்திய அரசியலமைப்பு  பகுதி நெகிழும் இயல்பும், பகுதி நெகிழா இயல்பும் கொண்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பு கூட்டாட்சி முறையும் ஒற்றையாட்சி முறையும்  கொண்டுள்ளது 
மத்திய அரசாங்கத்திற்கும் மாநில அர சாங்கத்திற்கும் அதிகாரங்கள் தனித்தனியே வரையறுக்கப்பட்டுள்ளன.
அதிகாரங்கள் மத்திய பட்டியல் ( Central List )  மாநில பட்டியல் ( State List )  பொதுப் பட்டியல்                      ( Concurrent List )  என்ற மூன்று பட்டியல்களில் வைக்கப்பட்டுள்ளன.
இந்திய அரசியலமைப்பின் மூன்றாம் பகுதியில் அடிப்படை உரிமைகள் இடம் பெற்றுள்ளன.             ( பிரிவு 12 முதல் 35 வரை).
இந்திய அரசியலமைப்பின் நான்காம் பகுதியில் அரசுக் கொள்கையினை நெறிபடுத்தும் கோட் பாடுகள் இடம் பெற்றிருக்கின்றன (பிரிவு 36 முதல் 51 வரை).
அரசியலமைப்பின் காவலனாக நீதித்துறை விளங்குகிறது. இந்திய குடிமக்களின் உரிமை களையும் சுதந்திரங்களையும் நீதித்துறை  பாதுகாக்கிறது.
பதினெட்டு வயது நிரம்பிய ஒவ்வொரு குடிமகனும், சாதி, மதம், நிறம், பாலினப் பாகுபாடு இன்றி தேர்தலில் வாக்களிக்க உரிமை பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து நாட்டிலிருந்து பெறப்பட்டவை
1. சட்டமியற்றும் முறை:
2. சட்டத்தின் பணி
3. ஒற்றைக் குடியுரிமை
4. பாராளுமன்ற முறை அரசாங்கம்
5. கேபினட் முறை அரசாங்கம்
6.சட்டத்தில் இருந்து பாதுகாப்பு                                                                                                                                            7.மேல் சபையை விட கீழ் சபைக்கு அதிக அதிகாரம்
8.பாராளுமன்றத்திற்கு பொறுப்பான அமைச் சர்கள்
அமெரிக்காவிலிருந்து   பெறப்பட்டவை:
1. சுதந்திரமான நீதித்துறை
2. நீதிப்புனராய்வு
3. அடிப்படை உரிமைகள்
4. உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம்
5. நீதிபதிகளை நீக்கும் முறை

6. அரசியலமைப்பின் முன்னுரை
7. துணை ஜனாதிபதியின் பொறுப்புகள்
8. அரசியலமைப்பைத் திருத்தும் முறைகள்
9. உச்சநீதிமன்றத்தின் அமைப்பும் இயக்கமும்
அயர்லாந்து நாட்டி
லிருந்து பெறப்பட்டவை:
1.அரசின் வழிநெறிக் கோட்பாடுகள்
2.ஜனாதிபதி முறை தேர்வு (தேர்தல்)
3.ஜனாதிபதியால், ராஜ்யசபைக்கு நியமிக்கப்படும் நியமன உறுப்பினர்கள்
                                            4.பலமான மத்திய அரசாங்கம்
5.எஞ்சிய அதிகாரங்கள் மத்திய அரசின் கீழ் வருவது

ஜெர்மனி  நாட்டிலிருந்து பெறப்பட்டவை:
நெருக்கடிநிலையின் போது அடிப்படை உரிமைகள் நீக்கப்படுவது
ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து பெறப்பட்டவை:
பொதுபட்டியல் முறை
ரஷ்ய நாட்டிலிருந்துபெறப்பட்டவை:                                                                                                                               அடிப்படைக் கடமை கள்
கனடா நாட்டிலிருந்து பெறப்பட்டவை:                                                                                                                        மாநிலங்களுக்கு இடை யேயான இலவச வர்த்தக முறை
தென் ஆப்பிரிக்காவிலிருந்து  பெறப்பட்டவை:                                                                                         பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் சட்டத் திருத்த முறை



முதல் அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் 1951-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது.

அரசியலமைப்பு சட்டம் என்பது அரசிய லமைப்பில் அடங்கியுள்ள வகையங்களைக் குறிக்கும்.

இந்திய ஜனநாயகத்திற்கு அடிப்படையான பண்புகளை விளக்கும் பகுதியாக முகவுரை (Preamble) அமைகிறது.
அமெரிக்க நாட்டின் அரசியலமைப்பைப் முக வுரை எனும் கொள்கையை இந்திய அரசியல மைப்பு வல்லுநர்கள் எடுத்துக் கொண்டனர்.
இந்திய அரசியலமைப்பிற்கு முகப்புரை வழங்கிய பெருமை ஜவஹர்லால் நேருவைச் சாரும்.
இந்திய அரசியலமைப்பின் திறவுக்கோல் ( Key to the Constitution )  , "இந்திய அரசியலமைப்பின் இதயம் ( Heart and Soul of the Constitution )  என்று போற்றப்படுவது முகவுரை
இந்திய அரசியலமைப்பு முகவுரை இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே திருத்தப்பட்டுள்ளது.
1976-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட 42-வது சட்டத் திருத்தத்தின்படி முகவுரையில் சமதர்ம (Socialist), மதச்சார்பற்ற (Secular), ஒருமைப் பாடு (Integrity) எனும் மூன்று சொற்கள் சேர்க்கப்பட்டன.


பகுதி-   1                                                                                                                                                                                          இந்திய அர சும் அதன் எல்லைகளும் பற்றி விளக்குகிறது.
இந்தியாவில் உள்ள மாநிலங்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆகும்.                                                         மத்திய ஆட்சிப் பகுதி யான யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை மொத்தம் 6 ஆகும்.                          ஒரு தேசிய தலைநகர்   பகுதி ( டெல்லி )யும் உள்ளன.
அடிப்படை உரிமைகள்
இந்திய அரசியலமைப்பு, தொடக்கத்தில் ஏழு அடிப்படை உரிமைகளைக் கொண்டிருந்தது.
1978-ல் 44-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி சொத்துரிமையானது அடிப் படை உரிமையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு  தற்போது ஆறு அடிப்படை உரிமைகள் உள்ளன.
1. சமத்துவ உரிமை (அரசியலமைப்பு பிரிவு 14-18): 
2. சுதந்திரத்திற்கான உரிமை (அரசியலமைப்புப் பிரிவு 19-22)
3. சுரண்டலுக்கு எதிரான உரிமை (அரசிய லமைப்புப் பிரிவு 23-24):                                                                            4. சமயச் சுதந்திரத்திற்கான உரிமை (அரசிய லமைப்புப் பிரிவு 25-28):
5. பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள் (அரசிய லமைப்புப் பிரிவு 29-30):
6. அரசியலமைப்பு தீர்வு வழிகளுக்கான உரிமை (அரசியலமைப்புப் பிரிவு - 32):

இந்திய அரசியலமைப்பு ஐந்து வகையான நீதிப்
பேராணையை அளிக்கிறது   :

1. ஆட்கொணர் நீதிப்பேராணை  (Writ  of  Habeas Corpus) :
தவறாக ஒருவர் காவலில் வைக்கப்பட்டால், அவருக்கு நீதி வழங்கும் நீதிமன்றம் காவலில் வைத்த அதிகாரிக்கோ அல்லது அரசாங்கத் திற்கோ ஆணை வழங்கி, காவலில் வைக்கப்பட்ட வரை நீதிமன்றத்தின்முன் கொண்டுவரச் செய்வதாகும்.
2. கட்டளை நீதிப்பேராணை (Writ of Mandamus):
ஒரு குறிப்பிட்ட செயலை உடனடியாக செய்யக்கோரி நீதிமன்றம் ஆணை பிறப்பிப்பதாகும்.
3. தடை நீதிப்பேராணை (Writ of Prohibition):
நீதிமன்றம் ஓர் அதிகாரிக்கு ஆணை பிறப்பித்து அவரது எல்லைக்குட்படாத ஒரு செயலைச் செய்யாதிருக்குமாறு ஆணை பிறப்பிப்ப தாகும்.
4. உரிமைவினா நீதிப் பேராணை (Writ of Quo warranto):
அரசாங்கத்தின் அலுவலர் ஒருவரை அவர் எந்த அடிப்படையில் குறிப்பிட்ட பதவியை வகிக்கிறார் என்பதைத் தெளிவுபடுத்தக் கோரும் நீதிமன்றத்தின் உத்தரவாகும்.
5. தடைமாற்று நீதிப்பேராணை (Writ of Certiorary):
நீதிமன்றம் தனது கீழ்பட்ட ஒரு அதிகாரிக்கோ அல்லது நீதிமன்றத்துக்கோ ஆணை பிறப்பித்து, குறிப்பிட்ட நீதிமன்றச் செயல்முறைகளையும் ஆவணங்களையும் தனக்கோ அல்லது உரிய அதிகாரிக்கோ மாற்றச்  செய்வதாகும். 

அடிப்படை உரிமையை நெருக்கடி கால அறிவிப்பின் மூலம் குடியரசுத் தலைவர் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியும்.
அடிப்படைக் கடமைகள்
அடிப்படைக் கடமைகள் என்ற பகுதி 1976-ம் ஆண்டில்தான் இந்திய அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது.

இந்திய அரசிலமைப்பு பாராளுமன்ற  அமைப்பினை கொண்டுள்ளது. பாராளுமன்றம் என்பது குடியரசு தலைவர், மாநிலங்கள் அவை, மக்களவை அகியவற்றை உள்ளடக்கியது.
மாநிலங்கள் அவை (Rajya Sabha)
மாநிலங்கள் அவை 250 உறுப் பினர்களைக் கொண்டது. இதில் 238  உறுப்பினர்கள் தேர்தல் முறையிலும் 12  உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால்  இலக்கியம், அறிவியல், கலை மற்றும் சமூக சேவை இவற்றில் சிறந்த அறிவும் அல்லது அனு பவமும் கொண்டவர்களிலிருந்து நியமனம் செய்யபடுவர் .
மாநிலங்கள் அவைக்கான தேர்தல் மறைமுகமானது.
மாநிலங் களின் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற பேரவை உறுப்பினர்களால் மாநிலங்கள் அவை உறுப்பினர்கள் தேர்வுசெயயபடுவர்
மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் இரண் டாண்டுகளுக்கு ஒரு முறை விலக காலியான இடங்களுக்கு மீண்டும் தேர்தல் நடைபெறும்.
உறுப்பினர்கள் ஆறு ஆண்டு காலம் பதவி வகிப்பார்கள்.
இந்தியத் துணைக்குடியரசுத் தலைவர்  மாநிலங்கள் அவையின் தலைவராகப் பொறுப்பேற்பார். துணைக் குடியரசுத் தலைவர் இல்லாத காலங்களில் துணைத் தலைவர் மாநிலங்கள் அவைக்குத் தலைமை தாங்குவார்

மக்கள் அவை (Lok Sabha):
மக்கள் அவை 565-க்கு மிகாத உறுப்பினர் களைக் கொண்டது.  தற்போது மக்களவையில் 545 உறுப்பினர்கள் உள்ளனர்
525 உறுப்பினர்கள் மாநிலங்களிலிருந்தும், 18 உறுப்பினர்கள் யூனியன் பிரதேசங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
ஆங்கிலோ - இந்திய சமூகத்தினருக்கு குடியரசுத் தலைவர் இருவரை நியமன உறுப்பினர்களாக நியமிப்பார்.
மக்கள் அவையின் பதவிக்காலம் ஐந்து ஆண்டு காலம் ஆகும்.
நெருக்கடி நிலைமை (Emergency) பிரகடனப் படுத்தும் காலங்களில் மக்கள் அவையின் காலத்தை ஓர் ஆண்டுக்கு மேற்படாமலும் நெருக்கடி நிலையை முடிவுக்கு கொண்டுவந்த பிறகு ஆறு மாதத்திற்கு மேற்படாமலும் சட்டத்தினால் நீட்டிக்கலாம்.
மக்கள் அவையின் தலைவர் (Speaker) நாடாளுமன்ற முதல் கூட்டத்தில் அவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்.

நாடாளுமன்றத்தின் பணிகள்(Functions of Parliament):
சட்டம் இயற்றுதல், நிர்வாக மேற்பார்வை, வரவு - செலவு அறிக்கை நிறைவேற்றுதல், பொது மக்களின் குறைகளைப் போக்குதல், முன்னேற்றத் திட்டங்களை உருவாக்குதல், பன்னாட்டு உறவுகளைப் பராமரித்தல் போன்ற பணிகளை ஆற்றி வருகிறது.
சட்டமியற்ற மசோதா நாடாளுமன்ற இரு அவைகளின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
நிதி மசோதா மக்கள் அவையில் மட்டுமே கொண்டுவர முடியும் நிதி மசோதவினை பொறுத்தவரை மக்கள் அவையின் ஒப்புதலே முடிவானது.
அதிகபட்சமாக நிதி மசோதாக்கள் மாநில அவையினால் 14 நாட்கள் மட்டுமே தாமதப்படுத்த இயலும் 14 நாட்களுக்குள்  எவ்வித முடிவினையும் மாநில அவை தெரிவிக்காவிடில் அம்மசோதா நிறைவேறியதாக கருதப்படும். 

நாடாளுமன்றக் கூட்டத் தொடர்கள் (Sessions of Parliament) :
அரசியலமைப்பின்படி நாடாளுமன்றம் ஒரு ஆண்டில் குறைந்தது இரண்டு முறை கூட்டப்பட வேண்டும்.
இரண்டு கூட்டங்களுக்கும் இடையில் ஆறு மாதங்களுக்கு மிகாமல் இடைவெளி இருக்கலாம் 
நாடாளுமன்றம் ஆண்டிற்கு மூன்று முறை கூட்டப்படுகிறது.
கூட்டத் தொடர்கள் :
 
1. வரவு - செலவு அறிக்கை கூட்டத் தொடர் - பொதுவாக ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் கூடும்.
2. பருவக்காலக் கூட்டத்தொடர் - பொதுவாக ஜூலை மாதத்தில் கூடும்.
3. குளிர்காலக் கூட்டத்தொடர் - பொதுவாக நவம்பர் மாதத்தில் நடைபெறும்.

குடியரசுத் தலைவர்
இந்திய நாட்டின் முதல் குடிமகன் குடியரசுத் தலைவர் ஆவார்.
இவர் இந்திய அரசின் தலைவரும் ஆவார். 
பெயரளவிலான தலைவர் (Nominal Chief),                                                                                                        சட்டப்படியான தலைவர் (Legal Chief),                                                                                                                                   முப்படைகளின் தலைவர்                                                                                                                                                                  பதவிக்காலம் 5 ஆண்டுகள்
தேர்வுக் குழுமம் (Electoral College) மூலம் தேர்ந்தெடுக்கப்படு கிறார்.
மக்களவையில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும், மாநிலச் சட்டமன்றங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் குடியரசுத் தலைவரைத் தேர்ந்து எடுப்பார்கள்.                             ஒற்றை மாற்று வாக்கு எனப்படும் ரகசியத் தேர்வு முறையில் குடியரசுத் தலைவர் தேர்வு செய்யப்படுகிறார்.
குடியரசுத் தலைவர் தேர்வு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அது உச்சநீதிமன்றத்தால் தீர்த்து வைக்கப்படும்
ஒருவர் குடியரசுத் தலைவர் பதவிக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியிடலாம். ஆனால் பொதுவாக குடியரசுத் தலைவர் பதவிக்கு இரண்டு முறைக்கு மேல் போட்டிடுவது இல்லை
குடியரசுத் தலைவர் தனது ராஜினாமாவை துணைக் குடியரசுத் தலைவரிடம் அளிக்க வேண்டும்.
குடியரசுத் தலைவரைப் பதவி நீக்கம் செய்ய குற்ற விசாரணை முறை மூலம் இதைச் செய்யலாம்.
குடியரசுத் தலைவர் மீதான குற்ற விசாரணைக் கான முன்னறிவிப்பு கால அவகாசம் 14 நாட்களாகும்.
குடியரசுத் தலைவரை பதவிநீக்கம் செய்யக் கோரும் குற்றச்சாட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஏதேனும் ஒன்றில் கொண்டுவரப் பட்டு குற்ற விசாரணை நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஒப்புதல் தேவைப்படும்.

குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்

1. நிர்வாக அதிகாரங்கள்
மத்திய அரசின் நிர்வாக அதிகாரம் இந்தியக் குடியரசுத் தலைவரிடம் உள்ளது.
மத்திய அரசின் அனைத்து நிர்வாக அதிகாரங் களுக்கு குடியரசுத்தலைவரின் பெயரிலேயே செயல்படுத்தப்படுகின்றன.
பிரதமரை நியமிக்கும் அதிகாரம் படைத்தவரும் அவரே, பிரதமரின் ஆலோசனைப்படி மற்ற அமைச்சர்களைக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
இந்தியத் தலைமை வழக்கறிஞர், இந்திய தலைமை கணக்காய்வர், தலைமைத் தேர்தல் ஆணையர், இந்தியாவின் தூதுவர்கள், மாநில ஆளுநர்கள், உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், மத்திய தேர்வாணையத்தின் தலைவர், முப்படைகளின் தலைமைத் தளபதிகள் போன்ற முக்கியமான பதவிகளில் உரிய நபர்களை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.

2. சட்டமன்ற அதிகாரங்கள் :
பாராளுமன்றத்தைக் கூட்டும் உரிமை பெற்றவர் குடியரசுத் தலைவர் ஆவார்.
பாராளுமன்றத்தின் இரு அவைகளையோ அல்லது ஏதேனும் ஒரு அவையையோ ஒத்திப்போடவோ அல்லது கூட்டங்களை முடிவுக்குக் கொண்டு வரவோ அதிகாரம் பெற்றவர்
மாநிலங்களவை 12 உறுப்பினர்களை நியமனம் செய்யவும், மக்களவையில் 2 ஆங்கிலோ - இந்திய இனத்தினரை நியமனம் செய்யவும் அதிகாரம்  உண்டு.
பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரமம் குடியரசுத் தலைவருக்கு உண்டு.
 
குடியரசுத் தலைவர் அங்கீகாரம் இல்லாது எந்த மசோதாவும் சட்டமாகாது.
பாராளுமன்றம் கூடாதபோது அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு .

3. நிதி தொடர்பான அதிகாரங்கள்
நிதி மசோதா பாராளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் முன் அனுமதி  பெற்றுதான் தாக்கல் செய்ய  முடியும் 
இந்திய அரசின் எதிர்பாராத செலவு (Contingency Fund) நிதிக்குப் பொறுப்பானவர் குடியரசுத் தலைவர்.
இந்தியாவின் நிதி ஆணையகத்தை (Finance Commission) அமைக்கும் பொறுப்பு இவருக்கு உண்டு.

4. நீதி தொடர்பான அதிகாரங்கள் :
குற்றவாளிகள் எவரையும் மன்னிக்கவோ தண்டனையை நிறுத்தி வைக்கவோ, குறைக் கவோ குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு, மரண தண்டனையில் இருந்து மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தை பெற்றவர் 
அரசியலமைப்பு சட்டங்கள் பற்றிய சந்தேகம் குடியரசுத் தலைவருக்கு ஏற்பட்டால் அவர் உச்சநீதிமன்றத்தை அணுகி விளக்கம் பெறலாம் .

5. நெருக்கடி நிலை தொடர்பான அதிகாரங்கள்:
போர் அல்லது அயல்நாட்டு ஆக்கிரமிப்பு அல்லது ஆயுதம் தாங்கியோரின் தேசிய நெருக்கடி நிலையை அறிவிக்கலாம்.
மாநிலங்களில் அரசியலமைப்பு இயங்குமுறை செயலற்றுப் போகும் போது மாநில நெருக்கடி நிலையை அறிவிக்கலாம்.
நிதி நிலை மிகவும் மோசமாகும் போது குடியரசுத் தலைவர் நிதி நெருக்கடி நிலையை அறிவிக்கலாம்.

துணைக் குடியரசுத் தலைவர்
துணைக் குடியரசுத் தலைவர் ஐந்தாண்டு காலம் பதவி வகிப்பார்.
ராஜ்யசபாவின் தலைவராக செயல்படுவார்
குடியரசுத் தலைவர் இறக்க நேரிட்டாலோ, அவரது பதவி காலியாகும் போதோ, நீக்கப்பட்டாலோ, அப் பதவி காலியாக இருக்கும் போதோ குடியரசுத் தலைவரின் பணிகளை  துணைக் குடியரசுத் தலைவர் கவனிப்பார்
பாராளுமன்றத்தின் இரண்டு அவை உறுப்பினர் களைக் கொண்ட வாக்காளர் குழுமம் (Electoral College) மூலமாக, விகிதாச்சார பிரதிநிதித்துவ அடிப்படையில் ஒற்றை வாக்குமுறை மூலமாக, துணைக் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப் படுவார்.
துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்காக ஒருவர்  எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டி இடலாம்.
துணைக் குடியரசுத் தலைவர் ஐந்தாண்டு காலம் பதவி வகிப்பார். 
துணைக் குடியரசுத் தலைவர்மீது குற்ற விசாரணை ஒன்றை மாநிலங்கள் அவையில் தாக்கல் செய்து மக்களவையிலும் அது நிறைவேற்றப்பட்டால் அவர் பதவி நீக்கம் செய்யப்படலாம்.
துணைக் குடியரசுத் தலைவர் தனது ராஜினாமா கடிதத்தைக் குடியரசுத் தலைவரிடம் கொடுக்க வேண்டும்.
மாநிலங்களவையில் ஒட்டெடுப்பின் போது சமநிலை ஏற்படும் போது மட்டும், ஒட்டுப் போடும் உரிமை பெற்றவர் துணைக் குடியரசுத் தலைவர்.

பிரதமர்
பிரதமர் அரசாங்கத்தின் செயல்பாட்டுத் தலைவர் மற்றும் நிர்வாகத் துறையின் தலைவர்.
குடியரசுத் தலைவர் மக்கள் அவையில் பெரும்பான்மையான உறுப்பினர் கொண்ட கட்சியின் தலைவரை அழைத்து பிரதமராக நியமித்து அமைச்சரவையை அமைக்குமாறு கேட்டுக் கொள்வார்.

அமைச்சரவை
அமைச்சர்கள், மக்கள் அவைக்கு தனித்தனி யாகவும், கூட்டமாகவும் பொறுப்புடையவர்கள்.

அமைச்சர்கள்  1. காபினெட் அமைச்சர்கள் 2. மாநில அமைச் சர்கள் 3. துணை அமைச்சர்கள்  மூன்றாக வகைபடுத்தபடுகின்றனர் 


மாநிலச் சட்ட மேலவை
மாநிலச் சட்ட மேலவை ஓரவை அல்லது ஈரவையைக் கொண்டிருக்கலாம். அவை சட்டப் பேரவை அல்லது விதான் சபா என்றும் சட்டமேலவை அல்லது விதான் பரிஷத் என்றும் அழைக்கப்படுகின்றன.
ஒரு மாநிலத்தின் சட்ட மேலவையை உருவாக்க அல்லது நீக்க அரசியலமைப்பின் அங்கம் 169-ன் கீழ் மூன்றில் இரண்டு பங்குப் பெரும்பான்மையுடன் ஒரு தீர்மானத்தைச் சம்பந்தப்பட்ட மாநிலச் சட்டப்பேரவை நிறைவேற்ற வேண்டும்.

மாநிலச் சட்ட மன்றம்
சட்டமன்றம்  ஓர் உண்மையான மக்கள் அவையாகும்.
சட்டமன்றம் உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை மாநிலத்திற்கு மாநிலம் மக்கள் தொகையைச் சார்ந்து வேறுபடுகின்றது. ட்டப்பேரவையின் அதிகபட்ச உறுப்பினர் எண்ணிக்கை 500-க்கு மிகையின்றியும் குறைந்த பட்ச உறுப்பினர் எண்ணிக்கை 60-க்குக் குறைவின்றியும் இருத்தல் வேண்டும்.       சிக்கிம் மாநிலச் சட்டப்பேரவை  30 உறுப்பினர்களை மட்டுமே பெற்றுள்ளது.                                                                                                                                                                        சட்டமன்றத்தின் பதவி காலம் ஐந்து ஆண்டுகள்  ஆனால் சட்டமன்றம் முன்கூட்டியே கலைக்கப்படலாம். நாட்டில் நெருக்கடி நிலை நிலவும் பட்சத்தில் அதன் ஆயுட்காலம், நாடாளுமன்றச் சட்டத்தினால் நீட்டிக்கப் படலாம்.
வயது வந்தோர் வாக்குரிமையின் அடிப்படையில், சட்டமன்றத் தொகுதிகளிலிருந்து அதன் உறுப்பினர்கள் மக்களால் நேரிடையாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் 
ஆங்கிலோ - இந்தியர் சமூகத்தினர் சட்டப் பேரவையில் பிரதிநிதித்துவம் பெறத்தவறியதாக மாநில ஆளுனர் கருதினால்  ஆங்கிலோ இந்தியர் ஒருவரை  சட்டப் பேரவையில் உறுப்பினராக நியமனம் செய்கிறார்
சட்டமன்ற உறுப்பினராக இருக்க குறைந்தது 25 வயது பூர்தியடைந்திருக்க வேண்டும்.
சட்டப் பேரவையின் அனுமதியின்றி அதன் கூட்டங்களில் அறுபது நாட்களுக்குப் பங்கேற்காத ஓர் உறுப்பினரின் பதவியைப் பேரவை பறிக்கலாம்.

சபாநாயகர்
சபாநாயகர் சட்டமன்ற உர்ப்பினர்களால்  தேர்வு செய்யபடுகிறார் 

ஆளுநர்
ஆளுநர் குடியரசு தலைவரால் நியமனம் செய்யபடுகிறார் ஆளுநராக நியமனம் செய்யப்படுவதற்கு முன் னர் மாநில முதலமைச்சர் கலந்தாலோசிக்கப் படுகின்றார்.மாநிலத்தின் பெயரளவிலான  தலைவராக ஆளுநர் உள்ளார்
மாநில ஆளுநரின் பதவிக்காலம் பொதுவாக ஐந்து ஆண்டுகளாகும். ஆனால் அவர் குடியரசுத் தலைவர் மனநிறைவைப் பெற்றுள்ள காலம் வரை பதவி வகிக்கின்றார்.
மாநில அரசாங்கத்தின் செயலாட்சி அதிகாரங் கள் அனைத்தும் ஆளுநரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன.
சட்டசபையில் பெரும்பான்மை பெற்ற கட்சியால் தேர்வு செய்யபடுபவரை முதலமைச்சராக  பதவியில் அமர்த்துகின்றார். முதலமைச்சரின் அறிவுரையின்படி ஏனைய அமைச்சர்கள் ஆளுனரால் நியமனம் செய்யப்படுகின்றனர்.
மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மாவட்ட நீதி பதிகள், தலைமை வழக்குரைஞர் ஆகியோரையும் ஆளுநரே நியமனம் செய்கின்றார்.
ஆளுநரின் கலந்தாலோசிப்புடன் மாநில உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் நியமனம் செய்யப்படுகின்றனர்.                                                                                                                                                                           சட்ட மேலவை உறுப்பினர்களுள் ஆறில் ஒரு பங்கினரையும் சட்டப் பேரவையில் ஆங்கிலோ இந்தியச் சமுதாயத்தைச் சார்ந்த ஒன்று அல்லது இரண்டு உறுப்பினர்களையும் ஆளுநர் நியமிக்கிறார்.
மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களையும்  நியமனம் செய்கின்றார்.
ஒரு நபரின் தண்டனையைக் குறைக்கவும் அல் லது அதை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்கவும் அல்லது குற்ற மன்னிப்புகள் வழங்க வும் ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனினும், மரண தண்டனையை மன்னிக்கும் அதிகாரத்தை அவர் பெற்றிருக்கவில்லை.

முதலமைச்சர்
அமைச்சரவையின் தலைவர் முதலமைச்சர்.
மாநிலத்தின் பெயரளவிலான ஒரு தலைவராக ஆளுநர் உள்ளார். உண்மை செயலாக்க அதிகாரங்கள் யாவும் முதலமைச்சரின் தலைமையிலான ஓர் அமைச்சர் குழுவினால் செயல்படுத்தப்படுகின்றன.
அரசியலமைப்பின் 164-ம் அங்கத்தின் கீழ் முதலமைச்சரையும் முதலமைச்சரின் பரிந்துரை மீது அனைத்து அமைச்சர்களையும் ஆளுநர் நியமனம் செய்கின்றார்.
முதலமைச்சரின் தலையாய பணி தனது அமைச் சரவையை அமைப்பதாகும்.
முதலமைச்சரின் நம்பிக்கையை ஓர் அமைச்சர் இழப்பாராயின், அவர் பதவி விலக வேண்டும்.

அமைச்சர்குழு
சட்டமன்ற உறுப்பினரல்லாத ஒருவரும் அமைச் சராக நியமிக்கப்படலாம். ஆனால் அவர் ஆறுமாத காலத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அமைச்சர் குழு சட்டமன்றதிக்கு கட்டுப்பட்டது

உச்சநீதிமன்றம்
இந்திய உச்சநீதிமன்றம் ஒரு தலைமை நீதிபதியையும் மற்றும் இருபத்தைந்து நீதிபதிகளையும் கொண்டுள்ளது. தற்போது இந்த எண்ணிக்கை ஒரு தலைமை நீதிபதி மற்றும் முப்பது  நீதிபதிகளை கொண்டதாக உயர்த்தபட்டுள்ளது
தலைமை நீதிபதியும் மற்ற நீதிபதிகளும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவார்கள்.
உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் அறுபத்தைந்து வயது  வரை பதவி வகிப் பார்கள்.
                                                                                                                                                                                                               
பஞ்சாயத்துராஜ்
பஞ்சாயத்து ராஜ் 1959-ம் ஆண்டு அக் டோபர் திங்கள் 2-ம் நாளன்று பண்டித ஜவ ஹர்லால் நேருவினால் துவக்கபட்டது .  முதன் முதலில்பஞ்சாயத்து ராஜ் அறிமுகம்   செய்த  மாநிலம்   ராஜஸ்தான் 
அரசியலமைப்பின் 73-வது மற்றும் 74-வது திருத்தங்கள் 1992-ம் ஆண்டு டிசம்பர் திங்களில் இயற்றப்பட்டன.
73-வது  சட்ட திருத்தம் பஞ்சாயத் ராஜ் பற்றியது இந்த திருத்தத்தின்கீழ் 11-வது இணைப்புப் பட்டியல் 29 வகை அதிகாரங்களைக் கொண்டுள்ளது. அவற்றின்மீது முழுமையான அதிகாரத்தைப் பஞ்சாயத்துக்கள் பெற்றுள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கிராம சபைக்கும் மற்றும் கிராமம் இடைப்பட்ட மற்றும் மாவட்ட நிலைகளில் பஞ்சாயத்துக்கள் அமையப்பெறவும் 73-வது திருத்தம் வகை செய்கின்றது.
74-வது  சட்ட திருத்தம் நகர் பலிகா  பற்றியது 12-வது இணைப்புப் பட்டியல் 18 வகை அதி காரங்களை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு களைக் கொண்டுள்ளன.

அவசர நிலைகள்
இந்திய அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள நெருக்கடி நிலைகள் - மூன்று

1. தேசிய நெருக்கடி நிலை 
-  சட்ட பிரிவு 352

2. மாநிலத்தில்  ஆட்சி
- சட்ட பிரிவு356

3. நிதி நெருக்கடி நிலை -
சட்ட பிரிவு  360

 
தேசிய நெருக்கடியை (National Emergency) விவரிக்கும் சட்ட பிரிவு -  352

தேசிய நெருக்கடி நிலையை அறிவிப்பவர் - குடியரசுத் தலைவர்

தேசிய நெருக்கடி நிலையை அறிவிப்பதற்கான காரணங்கள்

1. போர்

2. போர் மூலம் அபாயம்

3. வெளிநாட்டவர் ஆக்கிரமிப்பு

4. வெளிநாட்டவர் ஆக்கிரமிப்பிற்கான அபாயம்

5. உள்நாட்டுக் கலவரம்
  தேசிய நெருக்கடியின் கால அளவு 6 மாதங்கள் மட்டும்.

6 மாதத்திற்குப் பிறகு, மேலும் 6 மாதத்திற்கு நீட்டிக்க அதிகாரம் பெற்றவர் குடியரசுத் தலைவர்

மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை குறிக்கும் சட்ட பிரிவு -  356
முதன்முதலில் குடியரசுத் தலைவர்ஆட்சி அமலான வருடம் 1951
முதன்முதலில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்ட மாநிலம் பஞ்சாப்
இந்தியாவில் இதுவரை குடியரசுத் தலைவர்ஆட்சி 102 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிக முறை குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட மாநிலம் பஞ்சாப்
இந்தியாவில் அதிகமுறை குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியவர் இந்திராகாந்தி
நிதி நெருக்கடி நிலையைப் பற்றிக் கூறும் சட்ட பிரிவு -  360
நிதி நெருக்கடி நிலை பயன்படுத்தப்படும்போது பாராளுமன்றத்தின் அனுமதி பெறவேண்டிய கால அளவு 6 மாதங்கள்
நிதி நெருக்கடி நிலைக்கு ஆறுமாதத்திற்கு ஒருமுறை பாராளுமன்ற அனுமதி தேவையில்லை.
இதுவரை நிதி நெருக்கடி நிலை இந்தியாவில் ஒருமுறை கூட பயன்படுத்தப்படவில்லை.
நிதி நெருக்கடி நிலையின் போது                                                                                                                                                    1. மாநில அரசுப் பணியாளர்களின் (உயர்நீதிமன்ற நீதிபதிகள் உட்பட) சம்பளம் குறைக்கப்படும்.
2. மத்திய அரசின் பணியாளர்களின் (உச்சநீதிமன்ற நீதிபதிகள் உட்பட) சம்பளம் குறைக்கப்படும்.
நெருக்கடி நிலையின்போது பிரிவு 21 இல் உள்ள உரிமைகள்  பாதிக்கப்படாது   

நிதி ஆணையகம்
நிதி குழுவினை நியமனம் செய்பவர்  - ஜனாதிபதி
நிதிகுழுவின்  பதவிக்காலம் - 5 ஆண்டுகள்
நிதி குழுவின் மொத்த உறுப்பினர்கள் - 5 பேர்  தலைவர் 1  உறுபினர்கள் 4  நபர்கள்
நிதி குழு  என்பது  இந்திய அரசியல் அமைப்பின்படி அமைக்கப்பட்டது.
முதல் நிதி குழு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1951 - ஜவர்ஹர்லால் நேரு காலத்தில் அமைக்கபட்டது
முதல் நிதி ஆணையகத்தின் தலைவர் - கே.சி. நிகோய்
பத்தாவது நிதி ஆணையகத்தின் தலைவர் - கே.சி. பந்த்
பதினோராவது நிதி ஆணையகத்தின் தலைவர் பேராசிரியர் - ஏ.எம். குஸ்ரோ
நிதிக்குழுவின் முக்கியப் பணிகள்: மத்திய - மாநில அரசுகளுக்கிடையே வரி ஆதாரங்களைப் பிரித்துக் கொடுப்பது மத்திய அரசினால் மாநில அரசுகளுக்கு கொடுக்கப்படும் நிதி உதவியை பெறுவதற்கான விதிமுறைகளை வகுப்பது

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையகம் என்பது ஒரு நிரந்தர அமைப்பு.
தேர்தல் ஆணையகம் என்பது மூன்று நபர்கள் கொண்ட ஒரு குழு  ஆகும்.
தேர்தல் ஆணையகத்தின் மூன்று ஆணையர் களுக்கும்  அதிகாரங்கள் சமமாக வழங்கப்பட்டு உள்ளது . கருத்து வேறுபாடு ஏற்படும்  பொழுது பெரும்பான்மையோரின் முடிவு ஏற்றுக்கொள்ளபடும்.
தேர்தல் ஆணையம் அரசியல் சாசனத்தின்படி பாதுகாப்பப்படும் சட்ட பிரிவு - 324 (5)
தேர்தல் ஆணையர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை
தேர்தல் ஆணையகத்தின் ஆணையர்களை நியமிப்பவர் ஜனாதிபதி.
குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், லோக்சபா, ராஜ்யசபா தேர்தல்களை நடத்துவது  தேர்தல் ஆணையகம்.
தேர்தலின்போது வாக்குசீட்டுகளைப் பாதுகாப்பது மற்றும் சீரமைக்கும் பணியைச் செய்வது தேர்தல் ஆணையகம்
புதிய கட்சிகளைப் பதிவு செய்வது மற்றும் தேர்தல் கட்சிகளை அங்கீகரிப்பது - தேர்தல் ஆணையகம்.

திட்டக்குழு
திட்டக்குழுவின் தலைவர் - பிரதமர்
திட்டக்குழுவின் உறுப்பினர்கள் - மாநில முதலமைச்சர்கள்
திட்டக்குழு என்பது - ஒரு ஆலோசனைக் குழு
தற்போதைய திட்டக் குழுவின் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா
ஐந்தாண்டு திட்டங்களின் மீதான ஆலோசனையைத் தரும் அமைப்பு - திட்டக்குழு

தேசிய வளர்ச்சிக்குழு
தேசிய வளர்ச்சிக் குழுவின் தலைவர் - பிரதமர்
ஐந்தாண்டுத் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட முடிவான அங்கீகாரம் தரவேண்டிய அமைப்பு - தேசிய வளர்ச்சிக்குழு ஆகும்.

இணைப்புப் பட்டியல்கள்
அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட போது இருந்த பட்டியல்களின் எண்ணிக்கை 8 . தற்போது இந்திய அரசியலமைப்பில் உள்ள பட்டியல்களில் எண்ணிக்கை 12 ஆகும்
1951, 1985, 1992, 1992 ஆகிய ஆண்டுகளில் நான்கு பட்டியல்கள் அரசியலமைப்புச் சட்டத்திருத் தங்கள் மூலம் பின்னர் இணைத்துக் கொள்ளப் பட்டன.

பட்டியல் -1

இந்திய யூனியனின் அடங்கியுள்ள மாநிலங் களையும், மத்திய ஆட்சிப்பகுதிகளையும் பற்றி விவரிப்பது முதல் பட்டியலாகும். தற்சமயம் 28 மாநிலங்களும், 6 மத்திய ஆட்சிப் பகுதிகளும் (யூனியன் பிரதேசங்கள்) ஒரு தேசிய தலைநகர் பகுதியும் ( டெல்லி )  இந்தியாவில் உள்ளன.

பட்டியல் -2

இந்தியக் குடியரசுத் தலைவர், துணைக் குடியர சுத் தலைவர், மக்களவை மற்றும் மாநிலங்களவை சபாநாயகர்கள், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், மாநில ஆளுநர்கள், தலைமைக் கணக்காய்வர், சட்டமன்றத் தலைவர் ஆகியோரது சம்பளம் மற்றும் பிற வசதிகள் ஆகியவை விளக்கப்பட்டுள்ளன. இது ஐந்து பிரிவுகளைக் கொண்டது.

பட்டியல் -3

பதவிப்பிரமாணம் மற்றும் உறுதி மொழிகள் பற்றி விளக்குவது மூன்றாவது பட்டியலாகும். மத்திய மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், தலைமைக் கணக்காய்வர் ஆகியோரது பதவிப்பிரமாணம், இரகசியக் காப்புக் பிரமாணம் மற்றும் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழிகள் இப்பட்டியலில் விளக்கப் பட்டுள்ளன.

பட்டியல் -4

மாநிலங்களவையில் உறுப்பினர்கள் ஒதுக்கீடு தொடர்பானது  மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மாநிலங்களவையில் (ராஜ்யசபா) உறுப்பினர் களைப் பிரித்தளிப்பது பற்றிய விளக்கம் தரப்படுகிறது

பட்டியல் -5

தாழ்த்தப்பட்டோர் (SC) மற்றும் பழங்குடி மக்கள் (ST) வாழும் பகுதிகளின் கட்டுப்பாடும் நிர்வாகமும் பற்றி விளக்குகிறது. பாராளுமன்றத்தில் எளிதான மெஜாரிட்டி மூலம் இப்பட்டியல்களைத் திருத்த இயலும்
பட்டியல் -6

அசாம், மேகாலயா, மிசோரம் மாநிலங்களில் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளின் நிர்வாகம் பற்றி ஆறாவது பட்டியல் விவரிக்கிறது.இப்பட்டியலும் எளிமையான மெஜாரிட்டி மூலம் பாராளுமன்றத்தில் திருத்தப்படலாம்.

பட்டியல் -7

மத்திய - மாநில அரசுகளின் அதிகாரம் செயல்பாடுகள் பற்றி ஏழாவது பட்டியல் விளக்குகிறது. இதில் மூன்று பட்டியல்கள் இடம் பெற்றுள்ளன.

மத்தியப் பட்டியல் ( 97 பட்டியல் )
இது மத்திய அரசுக்கு உள்ள அதிகாரங்கள் பற்றியது. மத்தியப் பட்டியலில் மொத்தம் 97 துறைகள் உள்ளன. இவற்றில் சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்டது மத்திய அரசு, பாதுகாப்பு, அணுசக்தி, தேசிய நெடுஞ்சாலைகள், விமான, கப்பல் போக்குவரத்துக்கள், காப்பீட்டுக் கழகங்கள், மக்கள்தொகை, நதிகள், தொலைபேசி, பண அச்சடிப்பு இது போன்ற முக்கியமான 97 துறைகள் மத்திய அரசின் அதிகாரத்தில் உள்ளன.

மாநிலப்பட்டியல்
( 66 பட்டியல் )

இது மாநில அரசுக்கு உள்ள அதிகாரங்கள் பற்றியது. ஆரம்பத்தில் மாநிலப் பட்டியலில் இருந்த துறைகள் 66. இவற்றில் கல்வியும், விளையாட்டும் பொதுப்பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டமையால், தற்போது 64 துறைகள் மட்டுமே மாநில அரசின் அதிகாரத்திற்குள் வருகின்றன. விவசாய வருமானவரி, நகராட்சி. சிறைச்சாலைகள், சுங்கக் கட்டணங்கள், கேளிக்கை வரி போன்ற 64 துறைகள் மாநிலப்பட்டியலில் உள்ளன. இத்துறைகளில் சட்டம் இயற்றும் உரிமை பெற்றவை மாநில அரசுகள்.

பொதுப்பட்டியல்
( 49 பட்டியல் )

இது மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் உள்ள பொதுவான அதிகாரங்களைப் பற்றிப் பேசுகிறது. பொதுப் பட்டியலின் தொடக்கத்தில் 47 துறைகள் இருந்தன. கல்வியும் விளையாட்டும் தற்போது பொதுப் பட்டியலுக்குக் கொண்டு வரப்பட்டதால் தற்போது பொதுப்பட்டியலில் உள்ள துறைகள் மொத்தம் 49. காடுகள், மின்சாரம், தொழிற்சாலைகள், உணவுப் பொருட்கள், திருமணம், கல்வி, விளையாட்டு உட்பட 49 துறைகள்மீது சட்டம் இயற்றும் அதிகாரம் பெற்றவை மத்திய அரசும், மாநில அரசுகளும் ஆகும்.

பட்டியல் -8

அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளைப் பற்றி விவரிப்பது எட்டாவது பட்டியல் ஆகும். அசாம், பெங்காளி, குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கணி, மலையாளம், மணிப்புரி, மராத்தி, நேபாளி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது, மைதிலி, போடோ, சாந்தலி, டோக்ரி என்பன எட்டாவது பட்டியல் குறிப்பிடும் மொழி களாகும். 2003-ம் ஆண்டு மைதிலி, போடோ, சாந்தலி, டோக்ரி ஆகிய நான்கு மொழிகள் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டன.

பட்டியல் -9 :

நீதிமன்றங்களின் மறுபரிசீலனைக்கு அப்பாற் பட்ட சட்டங்களைப் பற்றி விவரிப்பது ஒன்பதா வது பட்டியலாகும். அரசியல் சட்டத்திருத்தம் -1 இன் மூலம் 1951-ம் ஆண்டு இப்பட்டியல் இணைக் கப்பட்டது. நிலக்குத்தகை, நிலவரி, ரயில்வே, தொழிற்சாலைகள் இது போன்றவற்றின் சட்டங் களும் ஆணைகளும் இதில் உள்ளன. 9-வது பட்டியலில் சேர்க்கப்பட்ட முதல் சட்டம் ஜமீன் தாரி ஒழிப்புச் சட்டமாகும். தமிழ்நாட்டில் 69% பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் மசோதா 1993-ல் 85-வது சட்டத்திருத்தத்தால் நிறைவேற்றப்பட்டு இப்பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன.

பட்டியல் -10 :

கட்சித் தாவல் தடைச் சட்டம் பற்றி விவரிப்பது பத்தாவது பட்டியலாகும். 1985-ம் ஆண்டு 52-வது சட்டத் திருத்தத்தின் மூலமாக இப்பட்டியல் அர சியலமைப்பில் இணைக்கப்பட்டது.
 
பட்டியல் -11 :

பஞ்சாயத்து மற்றும் ஊராட்சி நிறுவனங் களுக்கு வழங்கப்பட்டுள்ள சுய ஆட்சி அதிகாரம் பற்றி பதினோராவது பட்டியல் விளக்குகிறது. 1992-ம் ஆண்டு, 73-வது சட்டத் திருத்தத்தின்படி, 29 துறைகளில் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பட்டியல் -12:

இது நகர்பாலிகா மற்றும் நகரப்பஞ்சாயத்து களுக்கு வழங்கப்பட்டுள்ள சுய அதிகாரம் தொடர்பானது . 1992-ல் 74 சட்டத்திருத்தத்தின்படி, இது அர சியலமைப்பில் சேர்க்கப்பட்டது. நகரப் பஞ்சாயத்துக்கள் 18 துறைகளில் பெற்றுள்ள அதிகாரங்கள் பற்றி இப்பட்டியலில் விளக்கப்பட்டுள்ளன.

இந்திய மொழிகள்

இந்தியாவில் 1652-க்கும் மேற்பட்ட மொழிகள் பேச்சு வழக்கில் உள்ளன.
இந்திய அரசியலமைப்பால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின் எண்ணிக்கை 22 ஆகும்.                                                                                                                                                                                          இந்தியாவில் பொதுவான இணைப்பு மொழியாக ஆங்கில மொழி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் மொழிவாரி மாநிலமாக, முதன்முதலாக அமைக்கப்பட்ட மாநிலம் ஆந்திரப்பிரதேசமாகும். இது 1953-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
 

Tuesday, August 24, 2010

நடப்பு நிகழ்வுகள்

முல்லைப் பெரியாறு அணையை நேரில் ஆய்வு செய்ய உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையிலான ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் அமைக்கப்பட்ட இந்தக் குழுவில் தமிழகத்தின் சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன், கேரள அரசு சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.டி. தாமஸ் மற்றும் மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் இருவர் இடம் பெற்றுள்ளனர்.
விண்தம் கோல்ப் சாம்பியன்ஷிப் தொடரில், இந்தியாவின் அர்ஜுன் அத்வால் கோப்பை வென்றார். இதன்மூலம் அமெரிக்காவில் நடந்த கோல்ப் தொடரில் முதன்முதலில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியர் என்ற சாதனை படைத்தார்
சர்வதேச நிதியங்களிலிருந்து கடன்பெறும் ஏழை நாடுகள் வரிசையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. மெக்சிகோ  இரண்டாம் இடமும் தென்னாப்ரிக்கா மூன்றாம்   இடமும் வகிக்கிறது
எண்ணெயை உண்ணும் புதிய வகை நுண்ணுயிர் ஒன்றை மெக்சிக்கோ வளைகுடாப் பகுதியில்  லாரன்ஸ் பேர்க்லி தேசிய ஆய்வுகூடத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இப்புதிய நுண்ணுயிர்கள் ஓசியானோஸ்பிரிலாலெஸ் குடும்பத்தைச் சேர்ந்தவையாகும்
முதலாவது இளையர் ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட்  14 அன்று  சிங்கப்பூரில் உள்ள  மெரீனா பே என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் தளத்தில்  இளையர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாயின.
இப்போட்டிகள் 14ம் தேதி தொடங்கி இம்மாதம் 26ம் தேதி வரை நடைபெறும். போட்டிகளில் 14 முதல் 18 வரை வயதுள்ள 3,600 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொள்வர்
 உலகின் மிகவும் மக்கள் தொகை அடர்த்தி கொண்ட தீவு ஜாவா தீவு. இது இந்தோனீசியாவின் 5வது  மிக பெரிய தீவு
இந்தியாவில் கட்டுப்பாட்டு கணினிகள்  பணிகளை  முடிக்காவிட்டால் பிளாக்பெர்ரிக்கு தடை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. பிளாக்பெர்ரி செல்போனில் பரிமாறிக்கொள்ளப்படும் மெசேஜ்கள் ரகசிய குறியீடுகளாக மாற்றப்படுகிறது. இது இந்திய உளவு அமைப்புகளால் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு கடினமாக இருப்பதாக கூறப்படுகிறது.ரகசிய குறியீடுகளை புரிந்து கொள்ள உதவும் தொழில்நுட்பத்தை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும் என பிளாக்பெரிக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்தியாவில் கட்டுப்பாட்டு கணினிகள் 2 மாதத்தில் அமைக்கப்படும் என்று பிளாக்பெர்ரி உறுதிமொழி கூறியது.
இந்தியாவின்  தேசிய பாரம்பரிய விலங்காக யானை விரைவில் அறிவிக்கப்பட இருப்பதாக மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

 



Friday, August 13, 2010

இந்தியா 2009

ஜனவரி

1 - கபில்தேவ், கவாஸ்கர், பிஷன் சிங் பேடி ஆகியோர் ஐசிசியின் சர்வதேச புகழ் பெற்றோர் பட்டியலில் இடம் பெற்றனர்.
10 - பண மோசடியை ஒப்புக் கொண்ட சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவன
தலைவர் ராமலிங்கராஜு கைது செய்யப்பட்டார்.
15 - பிரபல இயக்குநர் தபன்சின்ஹா மரணமடைந்தார்.
19 - ஜார்க்கண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
27 - முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் மரணமடைந்தார்.


மார்ச்

2 - நாடாளுமன்றத்திற்கு ஏப்ரல் 16 முதல் மே 13ம் தேதி வரை ஐந்து கட்டங்களாக
தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

23 - டாடா நிறுவனத்தின் ரூ. 1 லட்சம் மதிப்பிலான நானோ கார் அறிமுகம் செய்யப்பட்டது.

ஏப்ரல்

10- தேர்தல் ஆணையராக தமிழகத்தைச் சேர்ந்த சம்பத் நியமிக்கப்பட்டார்.

21 - தலைமைத் தேர்தல் ஆணையராக நவீன் சாவ்லா பதவியேற்றார்.

28 - போபர்ஸ் ஊழல் வழக்கிலிருந்து இத்தாலிய தொழிலதிபர் குவாத்ரோச்சியின் பெயரை சிபிஐ நீக்கியது

மே


16 - நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 256 இடங்களையும், பாஜக கூட்டணி 161 இடங்களையும், 3வது அணி 68 இடங்களையும், 4வது அணி 28 இடங்களையும் பெற்றன.

19 -  பிரதமராக மன்மோகன் சிங் இரண்டாவது முறையாக  தேர்ந்தெடுக்கப்பட்டார்.
25 - மேற்கு வங்கம், வங்கதேசம், சிக்கிம், ஒரிசாவை அய்லா புயல் தாக்கியது.
31 - பிரபல எழுத்தாளர், கவிஞர் கமலாதாஸ் மரணமடைந்தார்.

ஜூன்

3- லோக்சபாவின் முதல் பெண் சபாநாயகராக மீரா குமார் பொறுப்பேற்றார்.
8 - லோக்சபா துணை சபாநாகராக பாஜகவின் கரியமுண்டா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
25 - இந்தியா முழுவதும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்வது குறித்து
அரசு பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.
28 - மலையாள இயக்குநர் லோஹிததாஸ் மரணமடைந்தார்.
30- பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான விசாரணை அறிக்கையை நீதிபதி  லிபரான், பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தாக்கல் செய்தார்.
மும்பையில், பிரமாண்ட கடல் பாலத்தை சோனியா காந்தி திறந்து வைத்தார்.

ஜூலை

21 - பிரபல இந்துஸ்தானி இசைப் பாடகி கங்குபாய் ஹங்கல் மரணமடைந்தார்.
26 - இந்தியாவின் முதலாவது அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பல் அரிஹாந்த்தை பிரதமர்
மன்மோகன் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.
29 - மலையாள நடிகர் ராஜன் பி தேவ் மரணமடைந்தார்.

ஆகஸ்ட் 
9 - பெங்களூரில் திருவள்ளுவர் சிலையை கர்நாடக முதல்வர் எதியூரப்பா முன்னிலையில் முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.
19 - ஜின்னாவைப் புகழ்ந்து நூல் எழுதியதற்காக ஜஸ்வந்த் சிங் பாஜகவிலிருந்து
நீக்கப்பட்டார்.
29 - சந்திரயான் விண்கலத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. சந்திரயான் செயலிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

செப்டம்பர்

2 - ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.
24- நிலவில் தண்ணீர் இருப்பதை சந்திரயான் விண்கலத்தில் இடம் பெற்றிருந்த அமெரிக்க செயற்கைக் கோள் கண்டுபிடித்தது.

அக்டோபர்

7 - தமிழகத்தில் பிறந்தவரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
13 - மகாராஷ்டிரா, ஹரியானா, அருணாச்சல் பிரதேசத்தில் சட்டசபைத் தேர்தல் நடந்தது.
22 - மகாராஷ்டிரா, அருணாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப்
பிடித்தது. ஹரியானாவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இஸ்ரோவின் புதிய தலைவராக ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றார்.

நவம்பர்

2 - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 21 நீதிபதிகள் சொத்துக் கணக்கை வெளியிட்டனர்.
7 - மகாராஷ்டிர முதல்வராக அசோக் சவான் 2வது முறையாக பதவியேற்றார்.
25 - சுகோய் போர் விமானத்தில் பறந்து சாதனை படைத்தார் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல்.
30 - பல ஆயிரம் கோடி ஊழல் தொடர்பாக ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடா கைது.

டிசம்பர்

2 - நதி நீர் இணைப்புத் திட்டம் கைவிடப்படுவதாக அறிவித்தது மத்திய அரசு.
6 - இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் வென்று, டெஸ்ட் தர வரிசையில் முதல் முறையாக முதலிடத்தைப் பிடித்தது இந்திய கிரிக்கெட் அணி.
18 - லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து எல்.கே.அத்வானி விலகினார்.
19 - பாஜக தலைவராக நிதின் கட்காரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

23 - தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ், அக்கட்சியின் சார்பில் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயசாந்தி ஆகியோர் தங்களது எம்.பி பதவிகளை ராஜினாமா செய்தனர். இவர்கள் தவிர 82 தெலுங்கானா பகுதி எம்.எல்.ஏக்களும் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
27 - ஆந்திர மாநில ஆளுநராக சட்டீஸ்கர் ஆளுநர் நரசிம்மன் கூடுதல்
பொறுப்பேற்றார்.
30 -கன்னட நடிகர் விஷ்ணுவர்த்தன் மரணமடைந்தார்.
   - ஜார்க்கண்ட் முதல்வராக சிபு சோரன் பதவியேற்றார்.
இந்திய ரூபாய்க்கான புதிய குறியீட்டுக்கு இந்திய அரசின் அமைச்சரவை வியாழனன்று ஒப்புதல் அளித்திருக்கிறது.புதிய குறியீட்டை வடிவமைத்திருப்பவர், தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், பிரபல ஐஐடி தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் மாணவருமான டி. உதயகுமார்.அடுத்த 6 மாதங்களில் இந்தியாவிலும், 18 முதல் 24 மாதங்களில் சர்வதேச அளவிலும் புதிய குறியீட்டை அறிமுகப்படுத்தி, பிரபலப்படுத்துவதற்கான முயற்சிகளில் அரசு ஈடுபடும் என்று அரசு தெரிவித்துள்ளது
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிக்கும் சட்டத்திருத்த மசோதா மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் பெற்றது.
தமிழகத்தில்  நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தில், மயிலாடுதுறையிலிருந்து ஆனதாண்டவபுரம் சாலையில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் பிற்காலச் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயில் உள்ளது.பத்து அடி ஆழத்தில் சோழர் காலத்தைச் சார்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செப்பேடுகள், 12 செப்புத் திருமேனிகள், பூசைப் பொருள்கள், வாத்தியக் கருவிகள், போன்றவை கிடைத்துள்ளன. கிடைத்துள்ள புதிய செப்பேடுகள் மூலம் பல்லவர்களிடமிருந்து தஞ்சாவூரை சோழர்கள் கைப்பற்றியதாக, ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Thursday, August 12, 2010

இந்தியா நிகழ்வுகள் 2009

ஜன. 8
சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் தலைவர் ராமலிங்க ராஜூ, 7 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேட்டை ஒப்புக்கொண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ஜன. 27 
முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் தனது 98 ஆவது வயதில் காலமானார்.
ஜன. 27
இலங்கையில் போர் வலுவான நிலையில், அங்கு அமைதியை ஏற்படுத்தும் நோக்கில், இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொழும்பு பயணம் மேற்கொண்டார்.

மார்ச் 5 
நாட்டின் புதிய தலைமை தேர்தல் கமிஷனராக, நவீன் சாவ்லா பதவி  ஏற்றார்

மார்ச் 31
1993 மு‌ம்பை கு‌ண்டு வெடி‌ப்பு வழ‌க்‌கி‌ல் த‌ண்டனை பெ‌ற்ற இ‌ந்‌தி நடிக‌ர் ச‌ஞ்ச‌ய் த‌த்‌துக்கு, ம‌க்களவை‌த் தே‌ர்த‌லி‌ல் போ‌ட்டி‌யிடுவதற்கு அனும‌திய‌ளி‌‌க்க உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் மறு‌த்து‌வி‌ட்டது.

மே 17
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 261 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைத் மீண்டும் தக்கவைத்துக் கொண்டது. 
மே 22 
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், நாட்டின் 18 ஆவது பிரதமராக மன்மோகன் சிங் பதவியேற்றுக் கொண்டார். அவர் பிரதமராகப் பதவியேற்றது, தொடர்ந்து இரண்டாவது முறையாகும். 

ஜூன் 3 
மக்களவை சபாநாயகராக மீரா குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் நாட்டின் முதல் பெண் மக்களவை  சபாநாயகர் என்ற பெருமையை அவர் பெற்றார். 

ஜூன் 12 
எச்1என்1 வைரஸ் கிருமியால் உண்டாகும் பன்றி காய்ச்சல் நோய், இந்தியா உள்பட உலகம் முழுவதும் வெகுவாக பரவியது. இந்நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 852 ஐ தொட்டதாக டிசம்பர் 26-ல் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்தது. 
ஜூன் 30 
பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான லிபரான் விசாரணை கமிஷன் அறிக்கை, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தாக்கல் செய்யப்பட்டது.

ஜூலை 26 
ரூ.14 ஆயிரத்து 500 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை, பிரதமர்  மன்மோகன் சிங் இயக்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதன் மூலம் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் உள்ள அமெரிக்கா, ரஷியா, பிரான்சு, இங்கிலாந்து, சீனா ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்தது. 
ஆக. 4 
நாட்டில் 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவசம் மற்றும் கட்டாய கல்வி அளிக்கும் மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
ஆக. 9 
பெங்களூருவில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை தமிழக முதல் அமைச்சர் கருணாதி திறந்து வைத்தார். அதன்  தொடர்ச்சியாக, சென்னையில் ஆகஸ்ட் 13 ஆம் தேதியன்று கன்னட கவிஞர் ச‌ர்வ‌க்ஞ‌ர் ‌சிலையை, க‌ர்நாடக முதலமை‌ச்ச‌ர்  எடியூர‌ப்பா திற‌ந்து வை‌‌த்தா‌ர்.

செப். 3 
ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.
செப். 7
2009-10 ஆம் கல்வி ஆண்டிலிருந்து சி.பி.எஸ்.சி. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் அறிவித்தார். 
வித்தது.  
செப். 30
தமிழக-கேரள எல்லையில், முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் அமைந்துள்ள தேக்கடி ஏரியில் சுற்றுலா பயணிகள் சென்ற  படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மொத்தம்  68 பேர் இறந்தது தெரியவந்தது.

அக். 7
முல்லை பெரியாறில் கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கு மத்திய அரசு அளித்துள்ள அனுமதி ஆணைக்கு தடை கோரி,  உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
அக். 22
மகாராஷ்டிரா, அருணாசல பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இம்மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது.

நவ. 2
ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் மதுகோடா மீது ரூ.4 ஆயிரம் கோடி ஊழல் புகார் எழுந்தது.

நவ. 23 
பாபர் மசூதி இடிப்பு தொடர்பான லிபரான் கமிஷன் அறிக்கையில் உள்ள விவரங்கள் பத்திரிகை ஒன்றில் வெளியானதால்  மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
நவ. 24
லிபரான் கமிஷன் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
நவ. 25 
இந்திய விமானப்படையில் மணிக்கு ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் செல்லும் அதிநவீன 'சுகோய்-30' ரக போர்  விமானத்தில் ஜனாதிபதி பிரதீபா பட்டீல் 800 கிலோமீட்டர் வேகத்தில் பறந்து சாதனை படைத்தார்.

நவ. 30 
நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது தங்களது கேள்விகளை கேட்க வேண்டிய உறுப்பினர்கள் 28 பேர் அவையில்  இல்லாததால், மக்களவை கேள்வி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. அவையை ஒத்திவைத்த சபாநாயகர் மீராகுமார், "கடந்த 20  ஆண்டுகளில் இத்தகைய நிகழ்வு நடந்ததே இல்லை," என்றார்.

டிச. 9
தனி தெலுங்கானா மாநில கோரிக்கையை வலியுறுத்தி 11 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ்
டிச. 19
பாரதிய ஜனதாக் கட்சியின் புதிய தேசிய தலைவராக மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த நிதின் கட்காரி பதவியேற்றுக் கொண்டார்.



சர்வதேச நிகழ்வுகள் 2009


ஜன. 20 
அமெரிக்காவின் 44 ஆவது அதிபராக பராக் ஒபாமா பதவியேற்றுக் கொண்டார். கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஒருவர், அமெரிக்க அதிபராவது இதுவே முதல் முறை என்ற சரித்திர சிறப்பைப் பெற்றார். 
ஜன. 27 
இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொழும்பு பயணம் மேற்கொண்டார்.
மார்ச் 3
பாகிஸ்தானின் லாகூரில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் சங்ககாரா, மெண்டிஸ் உள்பட இலங்கை கிரிக்கெட் வீரர்கள் 6 பேர்  காயமடைந்தனர்.

மே.18 
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் மரணமடைந்ததாக, இலங்கை அரசு தொலைக்காட்சி சேனல் தகவல் வெளியிட்டது.

மே 30
உலகில் 53 நாடுகளைச் 15,510 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, ஐக்கிய நாடுகளின் உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.

ஜூன் 1
பிரேசில் நாட்டில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நோக்கி புறப்பட்டுச் சென்ற ஏர் - பிரான்ஸ் விமானம் அட்லாண்டிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 228 பேர் உயிரிழந்தனர்.

ஜூன் 25 
உலகப் புகழ்பெற்ற பாப் இசைக் கலைஞர் மைக்கேல் ஜாக்சன் தனது 50வது வயதில் மரணமடைந்தார்.
ஆக. 6  
விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலராகவும், அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனராகவும் செயல்பட்டு வந்த கே.பி. என்று அழைக்கப்படும் செல்வராஜா பத்மநாதன் கைது செய்யப்பட்டதாக, இலங்கை பாதுகாப்பு அமைச்சகம்  தெரிவித்தது. 
ஆக. 23 
பஹாமஸ் நாட்டின் அட்லாண்டிஸ் பாரடைஸ் தீவில் நடந்த அழகிப் போட்டியில் 18 வயது வெனிசுலா நாட்டு அழகி  ஸ்டெஃபானியா, 'மிஸ் யுனிவர்ஸ்' அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 
ஆக. 31 
இலங்கைப் போர் நடவடிக்கைகளில் அரசை விமர்சித்து எழுதிவந்த இலங்கைத் தமிழ் பத்திரிகையாளர் ஜெயபிரகாஷ் திசநாயகத்துக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து இலங்கை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அக். 7
2009-ம் ஆண்டுக்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசை தமிழரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் வென்றார். அமெரிக்காவைச் சேர்ந்த தாமஸ் ஸ்டெயிட்ஸ், இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த அடா யோனாத் ஆகியோரும் இவருடன் பரிசை பகிர்ந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டது. 
அக். 9
அணு ஆயுத குறைப்பு நடவடிக்கைக்கு முயற்சி மேற்கொண்டதற்காக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. 
அக். 17
புவி வெப்பமயமாதல் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதற்காக, மாலத்தீவு நாட்டில் அமைச்சரவைக் கூட்டம் கடலுக்கு அடியில் நடத்தப்பட்டது.
நவ. 8
இலங்கையில் முப்படைகளின் தளபதி சரத் ஃபொன்சேகா தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.

நவ. 14
பிரதமரின் தூதுவராக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கொழும்பு சென்றார்.
நவ. 26 
இலங்கை அதிபர் தேர்தலில் அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக முன்னாள் ராணுவ தளபதி சரத் ஃபொன்சேகாவை பொது  வேட்பாளராக நிறுத்தப் போவதாக, எதிர்க்கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்கே அறிவித்தார்.
டிச. 18 
புவிவெப்பமடைவதை தடுக்கும் நடவடிக்கையாக, டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் டிசம்பர் 7 ஆம் தேதி தொடங்கி 18 ஆம் தேதி வரை காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு நடைபெற்றது. மொத்தம் 113 நாட்டுத் தலைவர்களும்  பிரதிநிதிகளும் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் குறிப்பிடத்தக்க உறுதியான முடிவுகள் எட்டப்படவில்லை.
டிச. 25
ஆ‌‌ப்கா‌னி‌ஸ்தானு‌க்கு கூடுத‌ல் படைகளை அனு‌ப்ப‌ப் போவதாக அமெ‌ரி‌‌க்கா அ‌றி‌வி‌த்திருந்த நிலையில், அமெ‌ரி‌க்கா‌வுக்கு எ‌திரான தா‌க்குதலை ‌தீ‌விர‌ப்படு‌த்த‌ப்போவதாக தா‌லிபா‌ன் பயங்கரவாத அமைப்பு ‌அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

நிகழ்வுகள் 2009

ஜன. 18
இல‌ங்கை‌யி‌ல் போரை ‌நிறு‌த்‌த ம‌த்‌திய அரசு உடனடியாக நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று வ‌லியுறு‌த்‌தி ‌விடுதலை‌ச் ‌சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் ‌திருமாவளவ‌ன் உண்ணாவிரதம் மேற்கொண்டார். பின்னர், நான்காவது நாளில் தமிழக  தலைவர்கள் சிலரது வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை அவர் கைவிட்டார்.

ஜன. 29 
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதையும், போரை முடிவுக்கு கொண்டுவரவும் வலியுறுத்தி, முத்துக்குமார் என்ற இளைஞர் தீக்குளித்து மரணமடைந்தார்.

பிப். 19 
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது 

மார்ச் 9 
இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி, சென்னையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டார்.
ஏப். 27 
இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வலியுறுத்தி, தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி சென்னையில் திடீரென காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.
மே 13 
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்தத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி 28 இடங்களில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. அணி 12 தொகுதிகளை கைப்பற்றியது. 
மே 28 
மத்திய அமைச்சர்களாக தி.மு.க.வின் மு.க.அழகிரி, தயாநிதி மாறன், ஆ.ராசா, காங்கிரஸ் கட்சியின் ஜி.கே.வாசன்  உள்ளிட்டோர் பதவியேற்றுக் கொண்டனர்.
மே 29
தமிழகத்தின் துணை முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டார்.

ஜூன் 25 
இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு, வெளிநாட்டு தமிழர்கள் உணவு, மருந்து உள்ளிட்ட நிவாரண  பொருட்களுடன் 'வணங்காமண்' என்ற கப்பலை அனுப்பினர். ஆனால், அந்த கப்பலுக்கு இலங்கை அரசு அனுமதி மறுத்ததால், அந்த கப்பல் சென்னை அருகே நிறுத்தப்பட்டது.

ஜூலை 23
இந்தியாவில் முதல் முறையாக ஒரு கோடி பேருக்கு இலவச மருத்துவ காப்பீடு வழங்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தியது. இந்த திட்டத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

ஆக. 22 
தமிழகத்தில் இளையான்குடி, தொண்டாமுத்தூர், கம்பம், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு  நடந்த இடைத்தேர்தலில் ‌தி.மு.க. கூ‌ட்ட‌ணி வே‌ட்பாள‌ர்க‌ள் வெ‌ற்‌றி பெ‌‌ற்றனர். 
ஆக. 26
தமிழகத்தில் அடுத்த கல்வி ஆண்டு முதல் சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்படுகிறது என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.
.  
அக். 7
முல்லை பெரியாறில் கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கு மத்திய அரசு அளித்துள்ள அனுமதி ஆணைக்கு தடை கோரி,  உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.

அக். 10
தமிழக தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் 10 பேர் கொண்ட குழு டி.ஆர்.பாலு தலைமையில் இலங்கை புறப்பட்டு சென்றது. அங்கு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலைபற்றி அறிய இந்தக்குழு சென்றது.

நவ. 8
நீலகிரியில் அதிகபட்சமாக 32 சென்டி மீட்டர் அளவில் பலத்த மழை பெய்தது. இதில் மண்சரிவு மற்றும் விபத்துகளில் 14 பேர்  பலியானார்கள். ஊட்டியில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதில் 29 பேர் பலியானார்கள்.
நவ. 12
உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின் ஒரு பகுதியாக தமிழ் இணைய மாநாடும் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
டிச. 3 
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே பள்ளி வேன் ஒன்று குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குளானதில் 9 குழந்தைகள்  பலியாகினர். இந்த விபத்தின் போது 11 குழந்தைகளைக் காப்பாற்றிய சுகந்தி என்ற ஆசிரியையும் உயிரிழந்தார்.
டிச. 23
திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. 

உலக தினங்கள்


ஜனவரி 26 - உலக சுங்க தினம்
ஜனவரி 30 - உலக தொழுநோய் ஒழிப்பு தினம்
பிப்ரவரி 14 - உலக காதலர் தினம்
பிப்ரவரி 21 - சர்வதேச தாய்மொழிகள் தினம்
மார்ச் 6 - சர்வதேச புத்தகங்கள் தினம்
மார்ச் 8 - சர்வதேச பெண்கள் மற்றும் அமைதி தினம்
மார்ச் 15 - உலக நுகர்வோர் தினம்
மார்ச் 20 - உலக ஊனமுற்றோர் தினம்
மார்ச் 21 - சர்வதேச வன தினம்
மார்ச் 22 - சர்வதேச தண்ணீர் தினம்
மார்ச் 23 - சர்வதேச தட்பவெப்ப நிலை தினம்
ஏப்ரல் 05 - உலக கடல் தினம்
ஏப்ரல் 07 - உலக சுகாதார தினம்
ஏப்ரல் 22 - உலக பூமி தினம்
ஏப்ரல் 30 - உலக குழந்தைத் தொழிலாளர் தினம்
மே 01 - உலக தொழிலாளர் தினம்
மே 08 - உலக செஞ்சிலுவை தினம்
மே 24 - உலக காமன்வெல்த் தினம்
மே 31 - உலக புகையிலை மறுப்பு தினம்
ஜுன் 05 - உலக சுற்றுப்புற தினம்
ஜுன் 20 - சர்வதேச அகதிகள் தினம்.
ஜுன் 26 - உலக போதை ஒழிப்பு தினம்
ஜுன் 27 - சர்வதேச நீரிழிவு நோய் ஒழிப்பு தினம்
ஜீலை 11 - உலக மக்கள் தொகை தினம்
ஆகஸ்டு 01 - உலக தாய்ப்பால் தினம்
ஆகஸ்டு 06 - உலக ஹிரோஷிமா தினம்
ஆகஸ்டு 09 - உலக நாகசாகி தினம்
ஆகஸ்டு 12 - சர்வதேச இளைஞர் தினம்
ஆகஸ்டு 18 - உலக உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம்
செப்டம்பர் 08 - உலக எழுத்தறிவு தினம்
செப்டம்பர் 16 - உலக ஓசோன் தினம்
செப்டம்பர் 27 - உலக சுற்றுலா தினம்
அக்டோபர் 1 - சர்வதேச முதியோர் மற்றும் ரத்ததான தினம்
அக்டோபர் 5 - உலக இயற்கைச் சூழல் தினம்
அக்டோபர் 16 - சர்வதேச உணவு தினம்
அக்டோபர் 17 - உலக வறுமை ஒழிப்பு தினம்
அக்டோபர் 24 - உலக ஐக்கிய நாடுகள் சபை தினம்
நவம்பர் 26 - சட்ட தினம்
டிசம்பர் 1 - உலக எய்ட்ஸ் தினம்
டிசம்பர் 2 - உலக அடிமைத்தனம் ஒழிக்க ஐ.நா. சபையின் சர்வதேச தினம்
டிசம்பர் 3 - சர்வதேச ஊனமுற்றோர் தினம்
டிசம்பர் 7 - கொடி தினம்
டிசம்பர் 10 - உலக மனித உரிமைகள் தினம்