ஜனவரி
ஜன.2: விடுதலைப் புலிகளின் அரசியல் தலைநகரான கிளிநொச்சியை இலங்கை ராணுவம் கைப்பற்றியது.
ஜன.6: வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா பதவியேற்பு.
ஜன.9: ஏடன் வளைகுடாவில் சோமாலிய கடல் கொள்ளையர்கள் பிடித்து வைத்திருந்த ஈரான் கப்பல் மற்றும் அதில் இருந்த 7 இந்திய பணியாளர்கள் உள்பட 25 பேர் விடுவிப்பு.
ஜன.20: அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பதவியேற்பு. பிப்ரவரி பிப்.3: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தியது ஈரான். பிப்.5: அட்லாண்டிக் பெருங்கடலை நீந்திக் கடந்த முதல் பெண் என்ற சாதனையைப் புரிந்தார் ஜெனிஃபர் ஃபிஜ்ஜி (56). பிப்.11: ஜிம்பாப்வே பிரதமராக மோர்கன் சுவாங்கிராய் பதவியேற்பு. மார்ச் மார்ச் 4: போர் குற்றம், மனித உரிமை மீறலுக்காக சூடான் அதிபர் உமர் அல் பசீருக்கு கைது வாரண்ட் பிறப்பித்தது சர்வதேச நீதிமன்றம். மே மே 13: நேபாளத்தில் பிராமணர் அல்லாதவர்களும் கோயிலில் பூஜை நடத்தலாம்என்றுஅந்நாட்டுஅரசுஅறிவித்தது. மே 18: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவிப்பு; விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து விட்டதாக ராஜபட்சதகவல். மே 23: நேபாள பிரதமராக நேபாள கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் மாதவ் குமார் நேபாள் போட்டியின்றித் தேர்வு. மே 25: நேபாள பிரதமராக மாதவ் குமார் நேபாள் பதவியேற்பு. ஜூன் ஜூன் 26: பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சன் மறைவு. ஜூலை ஜூலை 20: மியான்மர் தலைவர் ஆங் சான் சூகியிக்கு மகாத்மா காந்தி அமைதி விருதுஅறிவிக்கப்பட்டது. ஜூலை 29: கம்ப்யூட்டர் தேடுதல் பொறியில் முன்னணியில் உள்ள கூகுள் நிறுவனத்துக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் யாகூ- மைக்ரோசாஃப்ட் ஒப்பந்தம். ஆகஸ்ட் ஆக. 5: ஈரான் அதிபராக மஹ்மூத் அகமதுநிஜாத் பதவியேற்பு. அக்.6: அமெரிக்காவைச் சேர்ந்த சார்லஸ் கே. காவோ, வில்லார்ட் எ. பாயல், ஜார்ஜ் இ. ஸ்மித் ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு.அக். 7: தமிழகத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், அமெரிக்கரான தாமஸ் ஸ்டீட்ஸ், இஸ்ரேலின் அடா யோனத் ஆகியோருக்கு வேதியலுக்கான நோபல்பரிசுஅறிவிப்பு. அக்.8: 1) ஜெர்மனியைச் சேர்ந்த ஹெர்தா முல்லருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு. 2)ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மீது தலிபான் பயங்கரவாதிகள் இரண்டாவது முறையாக நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் 17 பேர் சாவு. அக்.9: அ மெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு. டிசம்பர் டிச.7: இந் தியா- ரஷியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு, யுரேனியம் வழங்குவது மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்து. டிச.12: விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் இறந்தது தொடர்பான ஆதாரம் மற்றும் விவரங்களை இந்தியாவிடம் அளித்தது இலங்கை.
No comments:
Post a Comment