Friday, September 24, 2010

தமிழகம் நிகழ்வுகள் - 2009

ஜன. 12
திருமங்கலம் இடைத்தேர்தல். இதில், தி.மு.க. வேட்பாலர் லதா அதியமான் 39 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 
ஜன. 18
இல‌ங்கை‌யி‌ல் போரை ‌நிறு‌த்‌த ம‌த்‌திய அரசு உடனடியாக நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று வ‌லியுறு‌த்‌தி, உண்ணாவிரதம் மேற்கொண்டார், ‌விடுதலை‌ச் ‌சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் ‌திருமாவளவ‌ன்.
ஜன. 23
இலங்கையில் போர் நிறுத்தம் அறிவித்து, தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காணும் வகையில் பேச்சுவார்த்தையைத் துவக்க  வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜன. 29 
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதையும், போரை முடிவுக்கு கொண்டுவரவும் வலியுறுத்தி, முத்துக்குமார் என்ற இளைஞர் தீக்குளித்து மரணமடைந்தார்.
பிப். 4
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து, இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கம் அழைப்பு விடுத்திருந்த மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. 
பிப். 19 
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி உள்பட பலரும் காயமடைந்தனர்.
மார்ச் 9 
இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி, சென்னையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டார்.
ஏப். 23
இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி, தி.மு.க அழைப்பு விடுத்திருந்த பொது வேலைநிறுத்தம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெகுவாக ஆதரவைப் பெற்றது. 
ஏப். 27 
இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வலியுறுத்தி, தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி சென்னையில் திடீரென காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.
மே 13 
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி 28 இடங்களில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. அணி 12 தொகுதிகளை கைப்பற்றியது. 
மே 28 
மத்திய அமைச்சர்களாக தி.மு.க.வின் மு.க.அழகிரி, தயாநிதி மாறன், ஆ.ராசா, காங்கிரஸ் கட்சியின் ஜி.கே.வாசன்  உள்ளிட்டோர் பதவியேற்றுக் கொண்டனர்.
மே 29
தமிழகத்தின் துணை முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டார்.
ஜூன் 25 
இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு, வெளிநாட்டு தமிழர்கள் உணவு, மருந்து உள்ளிட்ட நிவாரண  பொருட்களுடன் 'வணங்காமண்' என்ற கப்பலை அனுப்பினர். ஆனால், அந்த கப்பலுக்கு இலங்கை அரசு அனுமதி மறுத்ததால், அந்த கப்பல் சென்னை அருகே நிறுத்தப்பட்டது.
ஜூலை 23
இந்தியாவில் முதல் முறையாக தமிழ் நாட்டில்  ஒரு கோடி பேருக்கு இலவச மருத்துவ காப்பீடு வழங்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தியது. இந்த திட்டத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
ஆக. 22 
தமிழகத்தில் இளையான்குடி, தொண்டாமுத்தூர், கம்பம், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு  நடந்த இடைத்தேர்தலில் ‌தி.மு.க. கூ‌ட்ட‌ணி வே‌ட்பாள‌ர்க‌ள் வெ‌ற்‌றி பெ‌‌ற்றனர். 
ஆக. 26
தமிழகத்தில் அடுத்த கல்வி ஆண்டு முதல் சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்படுகிறது என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.
செப். 16 
தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர்களும், எம்.பி.,க்களும் தங்களுக்கு தமிழில் கேள்வி எழுப்பவும், பதில் தரவும் அனுமதி  தரவேண்டும் என்று நாடாளுமன்ற அதிகாரியிடம் கோரிக்கை மனு கொடுத்திருந்தனர். ஆனால், நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் தமிழில் பதில் அளிக்க முடியாது என்று மக்களவையின் தலைமைச் செயலர் பி.டி.டி. ஆச்சாரி தெரிவித்தார்.
செப். 23
முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக, புதிய அணை குறித்து ஆய்வு செய்வதற்கு கேரள அரசுக்கு மத்திய அரசு அனுமதி  வழங்கியது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
அக். 3
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில், தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு  நிரந்தர குடியுரிமை வழங்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  
  அக். 7
முல்லை பெரியாறில் கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கு மத்திய அரசு அளித்துள்ள அனுமதி ஆணைக்கு தடை கோரி,  உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
அக். 9
அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் மாநாடு சென்னையில் நடந்தது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் கருணாநிதிக்கு 'உலக கலை படைப்பாளி' விருது வழங்கப்பட்டது.
அக். 10
தமிழக தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் 10 பேர் கொண்ட குழு டி.ஆர்.பாலு தலைமையில் இலங்கை புறப்பட்டு சென்றது. அங்கு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலைபற்றி அறிய இந்தக்குழு சென்றது.
அக். 29
சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த வழக்கறிஞர்கள் - காவல்துறையினர் மோதல் தொடர்பான வழக்கில், சென்னையின் அப்போதைய போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன், கூடுதல் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உள்பட  4 போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நவ. 8
நீலகிரியில் அதிகபட்சமாக 32 சென்டி மீட்டர் அளவில் பலத்த மழை பெய்தது.
டிச. 7 
தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்காக இலங்கையுடன் புதிய ஒப்பந்தம் போடப்படும் என்றும், கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து  செய்ய மாட்டோம் என்றும் மாநிலங்களவையில் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.

டிச. 10 
கடலில் மீனவர்கள் மீன் பிடிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய பல்வேறு நிபந்தனைகளுடன் கூடிய கடல் மீன்பிடி தொழில்  சட்ட மசோதாவை, மத்திய அரசு நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்ய இருந்தது.
இந்த மசோதாவுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மீனவர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவியது. இதையடுத்து, இந்த மசோதாவை நடப்பு  கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட மாட்டாது. விரிவான ஆலோசனைக்குப் பிறகு முடிவு எடுக்கப்படும் என்று மத்திய வேளாண் அமைச்சர் சரத்பவார் அறிவித்தார்.
டிச. 23
திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. 

No comments:

Post a Comment